Friday, January 17, 2014

கிரக உச்சம், நீசம் என்றால் என்ன?

சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார்...சூரியனின் அதிக பட்ச கதிர்கள் பூமியை வந்து அடிக்கிறது...பூமி சூரியனின் சுற்று பாதையில் அருகில் செல்கிறது....ஐப்பசி மாதம் குளிர் காலம்...பூமி சூரியனிடம் இருந்து குறைந்த பட்ச கதிர்களை பெறுகிறது.....நீசம் என்று சொல்லாம்....

பூமி இன் சுற்று பாதையை,சாய்வு போன்ற அளவுகளை பொறுத்து கிரகங்களிடம் இருந்து அதிக கதிர் ,அல்லது குறைந்த கதிர்களை பெறுவதை உச்சம் நீசம் என்கிறோம்...
அப்படியானால் சூரியன் இரவில் தெரிவதில்லை....கதிர்கள் வந்து அடைவதில்லை எனினும் அடித்த வெய்யிலின் ஆகர்ஷ்ணா சக்தி பூமியில் இருக்கும்..

இதே போல் சந்திரனை ஆய்வுக்கு எடுத்து கொண்டால் இது பூமியின் துணைக்கோள் மற்றும் அளவில் 2 1/2 நாள் தான் ஒரு ராசி மண்டலத்தின் கீழ் வருகிறது..அதே சமயம் பகல் இரவு ,திதி போன்றவற்றின் அடிப்படையில் சந்திரனின் கதிர் வீச்சின் அளவு மாறுகிறது...ஆகார்ஷ்ணா சக்தி மாறுகிறது....
இது போல் மற்ற கிரகங்கள் கதிர்களும் பூமியை வந்து குறைந்த அளவோ அல்லது மிகுந்த அளவோ ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் தாக்குகின்றன.

கிரகங்கள் உள்வட்ட கிரகங்களா,வெளி வட்ட கிரகங்களா என்பதை பொருத்தும் கதிர் வீச்சின் அளவு மாறுகிறது....இதற்கு ஏற்ப கிரகங்களின் உச்ச நீச வீடுகளை நம் ரிஷிகள் தீர்மானித்து உள்ளனர்...
ஒரு கிரகம் உச்சம் பெற்றால் நன்மை செய்யும்,நீசம் பெற்றால் தீமை செய்யும் என்பது தவறான கருத்து..

லக்னம் ஓர் பார்வை

கரு உண்டான பின் அது படி படியாக வளர தொடங்குகிறது..அந்த உண்டான கருவில் அந்த கருவின் உடல் மன அமைப்புக்கு உட்பட்ட படி ஏதாவது ஒரு உயிர் உள்ளே நுழையும்.எந்த உயிர் என்பதை தீர்மானிப்பது அந்த உயிரின் முன் பல ஜென்ம பாவ புண்ணியங்களே...அவ்வாறு ஒரு உயிர் ஒரு கருவில் (பிண்டத்தில்) உட்புகும் போது....அது தனக்கு ஏற்றவாறு ஏதாவது சக்கரத்தின் வழியாக உடம்பில் புகும்.(மூலதாரம்,அனாகதம்,ஆக்னா)....பெரும்பாலும் அந்த ஆத்மா தலை வழியாக ஆக்னா வில் நுழைந்து விடும். இவ்வாறு நுழையும் நேர உதய ராசியும் குழந்தை தலை வெளிவரும்(பிறக்கும் போது) உதய நேர ராசியும் ஒன்றாக இருக்கும்.நம்மால் கருவில் ஆத்மா புகும் நேரத்தை காண முடியாது.அது 5,6,7,8 வது என எந்த மாதம் வேண்டுமானால் நடக்கலாம்.
இங்கே ஆத்மா என்பதை ஜீவ ஆத்மா என்று கொள்ள வேண்டும்.....

உடல் இறந்த பின் அந்த உயிரில் (அணுவில்) பதிவான ஆழ்ந்த வாசனைகளை எடுத்து கொண்டு ஜீவ ஆத்மா வெளியேருகிறது....மீண்டும் பிறக்க சரியான கால கட்டம் இறைவனால் அமைக்கப்படும் போது....அந்த வாசனைகள்(பாவ,புண்ணிய,காம பதிவுகள்) உடன் ,அந்த ஜீவ ஆத்மா கருவுக்குள் நுழைகிறது..பிறந்தவுடன் சுவாசிக்க சுவாசிக்க அந்த வாசனைகள் மீண்டும் உயிர் பெறுகின்றன...
லக்னம் என்பது ஒரு ஆத்மா உடலில் புகும் நேரத்தில் உதயமாகும் ராசியை குறிக்கிறது எனலாம்.அதே ராசி தான் குழந்தை இந்த பூமியில் முதல் சுவாசத்தை சுவாசிக்கும் போதும் அமைகிறது எனலாம்.


பெரும்பாலும் குழந்தை பிறக்கும் போது உயிர் அந்த உடலோடு ஒட்டியும் ஒட்டாமல் தாமரை இலை தண்ணீர் போல இருக்கும்.அதன் சக்தி ஆக்னாவில் இருக்கும்.



கால போக்கில் அந்த உயிர் சக்தி படி படியாக கிழ் இறங்கி முலாதாரத்துக்கு வந்து விடுகிறது...கடைசியில் அந்த உடல் தான் நான் என நம்ப ஆரம்பித்து விடுகிறது.அதன் பின் கால போக்கில் நான் super star, power star என நம்ப ஆரம்பித்து விடுகிறது.. :)



Wednesday, January 15, 2014

ராகு -ஓர் மெய் ஞான விளக்கம்

ராகு வை பற்றி தெரிந்து கொள்ளும் முன் கேதுவை  பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ராகு ராசி மண்டலத்தில் (அண்டத்தில)கீழ் வரும் நட்சத்திர கூட்டங்களை யும்,பிண்டத்தில் கீழ்வரும் சக்கரங்களையும் ஆளுமை செய்கிறார்.

திருவாதிரை = விசுத்தி சக்கரம்
சுவாதி =சுவாதிஷ்டினம் சக்கரம்
சதயம்=மணிப்புரகம் சக்கரம்

கேது சூரியனின் நிழல் என்றால் ராகு சந்திரனின் நிழல்.
காளி=ராகு
சிவா என்ற வெறுமை-ல் இருந்து காளி=ராகு தோன்றுகிறது.

சிவனின் சுவாதிஷ்டினம்,மணிப்புரகம் என்கிற சக்கரத்தில் இருந்து ராகு=காளி தோன்றுகிறது. இதை தான் கிழ் கண்ட படம் சொல்ல முயற்சி செய்கிறது.[படத்தில் காளியின் கால் சிவனின் மணிப்புரகம் சக்கரத்துக்கு மேல் இருக்கிறது.]



சுவாதிஸ்டினா சக்கரம் காரணமாக தான் ஆண் தன் உயிர் சக்தி கொண்டு குழந்தை பெற்று கொள்கிறான்.
இதுவே பெண்களுக்கு சுவாதிஸ்டினா சக்கரம் ஸ்துல உடலில் கருப்பையை ஆளுமை செய்கிறது.




மணிப்புரக சக்கரம் மனிதன் மனத்தை ஆளுமை செய்கிறது....மணிப்பூரக ராகு-சந்திரன் உடன் இணைந்து கெட்டால் மனம்பைத்தியம் பிடிக்கிறது.
ராகு இந்த சக்கரங்களை ஆளுவதால் தான் ராகு ஜாதகத்தில் கெடும் போது காமம் போதை என ஜாதகன் அடிமை ஆகிறான்.ராகு நல்ல நிலையில் இருக்கும் போது அதிக உயிர் சக்தி பெறுகிறான்.திரைப்படம்,காவியம் ஓவியம்,இலக்கியம் போன்றவற்றில் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறான்.

விசுத்தி சக்கரம் நன்றாக செயல் படும் போது சங்கீதம் ,இசை போன்ற வற்றில் ஈடுபடுகிறான்.கெடும் போது விஷம பேச்சில் ஈடுபடுகிறான்.
இந்த சக்கரங்கள் நமது சூட்சம உடலை ஆளுமை செய்கின்றன... ஸ்துல உடலில் நோய் வருகிறது என்றால் அதன் அறிகுறி சூட்சம உடலி தான் முதலில் தெரியும்....இதை வைத்து தான் நாடி மூலம் நோய் அறிந்து சொன்னார்கள் நமது சித்த யோகிகள்..




உண்மை இப்படி இருக்க ...ராகு கெட்டால் பாம்புக்கு பால் முட்டை வை என்று சொல்லுகிறார்கள் சில ஜோதிடர்கள் :) பாம்பு பால் முட்டை சாப்பிடாது என்பது வேறு விசயம்..

கேது -ஓர் மெய் ஞான விளக்கம்


ராகு கேது வை பற்றி இன்று எண்ணில் அடங்கா குழப்பங்கள் ஜோதிடர் மற்றும் மக்களிடையே நிலவுகிறது.
ராகு கேதுவை பற்றிய புராண கதைகள் நமக்கு தெரியும்....இன்னும் அதையே நம்பி கொண்டு இருக்கலாமா??
ஜோதிடத்தில் கேது ராகு திசையை வைத்து பயம் காட்டும் ஜோதிடர் பலர் உண்டு...
உண்மையில் கேது யார்?கேது வின் அதி தேவதை விநாயகர் என்று சொல்ல படுவதன் காரணம் என்ன??

கேது =ஓம்(ஆ உ ம)=விநாயகர்

ஆ =மூலம் நட்சதிரம்(தனுஷ்) =முலாதாரம் சக்கரம்
உ =மகம் நட்சதிரம்(சிம்மம்) =அனாகதம் சக்கரம்
ம =அஸ்வினி நட்சதிரம்(மேஷம்) =அக்ஞை சக்கரம்

அதியான சிவத்தில் இருந்து ஓம் என்ற நாதம் தோன்றியது.. அந்த ஓம் இல் இருந்து தான் பல அணுக்கள் ,பெரும் அணுக்கள்( நட்சத்திரகள்,கோள்கள்,) தோன்றின..அதனால் தான் சிவத்தை வழிபடும் முன் விநாயகரை முதலில் வணங்கி செல் என்று சொல்ல பட்டது.. அதாவது ஓம் என்ற மந்திரம் ஜெபிக்க ஜெபிக்க ஆதி சிவா என்ற பேருண்மையை உணரமுடியும் என்பதே இதன் பின்னால் உள்ள ரகசியம்.



[[மூலாதார சக்தி மட்டுமே மிகுந்த மனிதன் காட்டு மிராண்டி யாகவும் ..பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் அவன் யோகி ஆவதை மேல் கண்ட படம் விளக்குகிறது.]]

மனிதனுக்கு மட்டும் அல்ல ..மற்ற உயிர்களிலும் இந்த குண்டலினி சக்தி உண்டு...அந்த சக்தியானது அந்த உயிரின் பரிணாம வளர்ச்சிக்கு தகுந்தபடி இருக்கும்.
ஜோதிடத்தில் மிக வலுவான கிரகம் கேதுவே...ஏன் எனில் முதன் முதலில் ஒரு அணு சிவாவில் இருந்து உண்டாகும் போது அதன் சக்தி தான் கட்டமைக்க படுகிறது.அந்த சக்தியை கட்டமைப்பது கேது-ராகு என்ற குண்டலினி சக்தியே.
மூலாதார,அனாகத,ஆக்ஞை சக்கரத்தை ஆள்பவர் கேதுவே.
சூரிய குடும்பத்தில் கேது என்பவர் சூரியனின் நிழல் என்று சொல்லலாம்...


நமது ராசி மண்டலத்தில் அஸ்வினி தான் முதல் நட்சத்திர கூட்டம்...அதே சமயம் அஸ்வினி நட்சத்திரத்தில் தான் சூரியன் உச்சம் பெறுகிறார்...
மகம் நட்சத்திரதில் ஆட்சி பெறுகிறார்...மூலம் நட்சத்திரதில் நட்பு
பெறுகிறார்.



சூரியன் என்கிற ஆத்மாவின் இன்னொரு புறமே குண்டலினி சக்தி என்கிற கேது ஆவார்.....கேது நல்ல நிலையில் உள்ள ஜாதகர் ஆத்ம ஞானம் பெரும் பாக்கியத்தை பெறுகிறார்..



கேது வலு பெற்றால் ஆத்ம ஞானம் சித்திக்கும்.உண்மையான யோகிகள் அனைவரின் ஜாதகத்தில் கேது வலு பெற்று இருக்கும்.
ஜோதிட கலையை உலகிற்கு அளித்தவர்கள் கேது வின் ஆதிக்கம் பெற்ற ரிஷிகள் தான்...
ஆனால் அந்த கலை இன்று பலரிடம் மாட்டி கொண்டு படாத பாடு படுகிறது.. :)
வெறுமனே புதன் ஆதிக்கம் இருந்தால் ஜோதிட கணிதம் நன்கு செய்ய முடியும்..ஜோதிடர் ஆகலாம்.ஆனால் கேது நல்ல முறையில் இருப்பின் மட்டுமே ஜோதிடருக்கு இறை அருள் துணை நிற்கும்..

குண்டலினி சக்தியை குறிக்கும் குறியீடுயாக பாம்பை சொல்லி வைத்து சென்றனர் நம் யோகிகள்..இப்போது நீங்களே சொல்லுங்கள் ராசி மண்டலத்தில் ராகு கேது ஏன் பின்புறமாக சுற்றுகிறார்கள் என்று??.. அடுத்த பதிவில் ராகுவை பார்ப்போம்..

Friday, January 10, 2014

குரு வணக்கம்



                             குரு ப்ரம்மா குரு விஷ்ணு
                             குரு தேவோ மஹேஸ்வரஹ
                             குரு சாட்சாத் பரப்ரம்மா
                             தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா....

விநாயகர் துதி


 விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
 விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
    கண்ணில் பணிமின் கனிந்து