Friday, May 30, 2014

என்ன கொடுமை சரவணன் இது....!!!


ஒருவர் ஜோதிட மகா குரு மற்றும் ஆதித்யா குரு என்று சொல்லி கொள்கிறார்.....ஜோதிடத்தில் பல்வேறு வகைகள் உள்ளன....அனைத்தும் அறிந்தவர் யாரும் இல்லை என்றே சொல்லலாம்....ஜோதிட மகா குரு என்று சொல்பவர் ராசி பலன் தான் அதிகம் எழுதுகிறார்.......மகா குரு என்று சொல்கிறாரே இவர் அனைத்து ஜோதிட முறைகளை அறிந்தவார என்ற கேள்வி நமக்கு எழுகிறது.....இல்லை KP ஜோதிடம் போல ஏதேனும் புதிய முறையை கண்டறிந்தவரா என்ற கேள்வி நமக்கு வருகிறது.....
இவர் சில கருத்துகளை நேரடியாக சொல்லாமல் தலையை சுற்றி மூக்கை தொடுகிறார்...அடிக்கடி சூட்சமம் சூட்சமம் என்று bulid up வேறு......இவரை சூட்சம காந்த் என்றே சொல்லலாம்........  :)  :)

இவரிடம் ஓரிரு முறை கேள்வி கேட்டேன்....உடனே FaceBook இல்
 block செய்து விட்டார்..... என்ன கொடுமை சரவணன் இது....!!!அண்ணன் ( சூட்சம காந்த்)பேச்சுக்கு return பேச்சு வரவே கூடாது ..சரியா... :)

Saturday, May 24, 2014

ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தகுழந்தைகள் பலன் மாறுபாடு


கேள்வி:

திருச்சியில் பிறந்த இரட்டை குழந்தைகள் இருவருடைய உடல் நலத்திலும் பிரச்னை. இருவருக்கும் அறுவை சிகிச்சை கூட வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் ,.

குழந்தைகளின் ஆயுள் எப்படி உள்ளது?
இருவருக்குமே அறுவை சிகிச்சை தேவை படுமா அல்லது யாரவது ஒருவருக்கு மட்டும் அறுவை சிகிச்சை தேவை படுமா?

முக்கியமான தகவல் இருவருக்கும் ஒரு நிமிட பிறந்த நேர வித்தியாசம் மட்டுமே .

பிறந்த தேதி. 14/6/2012
முதல் குழந்தை பிறந்த நேரம்:18.14 pm
இரண்டாவது குழந்தை பிறந்த நேரம் :18.15 Pm

பிறந்த ஊர்: Trichirapalli .

(மேற்கண்ட கேள்வி KP ஜோதிட Expert,FB நண்பர் சரவணராஜ் அவர்கள் ஆய்வுக்காக கேட்ட கேள்வி)


என்னுடைய பதில்:

இரண்டாவது குழந்தைக்கு செவ்வாய் 6 இம் பாவ உப நட்சத்திர அதிபதியாக வந்து மற்றும் 10 பாவ உப நட்சத்திர அதிபதியாகவும் வருவதால்,6 இம் பாவத்தின் பலனை 10 பாவம் விருத்தி செய்யும் என்பதால் நோய்யின் தன்மை தீவிரம் அடைவதையும்...செவ்வாய் அறுவை கிகிச்சை காரகன் என்பதால் அது அறுவை கிகிச்சைக்கு கொண்டு சென்று இருக்கும்....மேலும் செவ்வாய் 6இம் பாவ குறிக்காட்டிகளான சுக்கிரன் கேதுவின் நட்சத்திரம் உப நட்சத்திரத்தில் உள்ளது...

முதல் குழந்தைக்கு செவ்வாய் 6 இம் பாவ உப நட்சத்திர அதிபதியாக வந்து சந்திரன் 10 பாவ உப நட்சத்திர அதிபதியாக வந்து உள்ளது..இங்கே சந்திரன் 5இம் பாவ குறிக்காட்டி ஆவதுடன் 6இல் உள்ள கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பினும் கூட தன் சொந்த உப நட்சத்திரத்தில் நின்று 5பாவ பலனை தருவார்...6 பாவம் நோய்வாய்ப்படுதல்,5 இம் பாவம் குணமடைவதை காட்டுகின்றன....இந்த குழந்தைக்கு அறுவை கிகிச்சை தேவை பட்டு இருக்காது...

இங்கே ஒரு நிமிட இடைவெளியில் குழந்தைகள் பிறந்து இருப்பினும் கூட, பத்தாம் பாவ உப நட்சத்திரம் மாற்றம் பெறுவது...இரு குழந்தைகளுக்கும் வெவ்வேறு கர்ம வினைகளை குறிகாட்டுகின்றன..


நடந்த உண்மை:இரண்டாவது குழந்தைக்கு தான் இருதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தேர்யது .

Sunday, May 18, 2014

கேள்வி பதில்!!



கேள்வி:ஒரு குழந்தை ஒரு மருத்துவமனையில் பிறகிறது. அதேநேரத்தில் அதே மைக்ரோ,நேனோ விநாடியில் அதே மருத்துவமனையில் இனொரு குழந்தை பிறக்கிறது.மிகசரியாக குழந்தைகளின் ஜாதகம் ஒற்றி போகிறது . இருபினும் இவர்களின் வாழ்கை வெவ்வேறு திசையில் பரினமிகிறது. இது எவ்வாறு நடகிறது . ---???

பதில்:ஜோதிடம் என்பது ஆகாயம்(காலம்) மட்டும் அல்ல....நிலம் நீர் காற்று நெருப்பு அனைத்தையும் உள் அடக்கி பார்க்க வேண்டும்....
இரண்டு குழந்தைகள் ஒரே மருத்துவமனையில் பிறந்தாலும் ...இரண்டு குழந்தைகளின் நிலம்(உடல்) வேறு.....நீர்(சுக்கிலம்,கரு முட்டை இணைவு)கரு உண்டான நேரம் வேறு....சுவாசம் உள் இழுக்கும் நேரம் வேறு.....உடல் மாறுபாட்டால் சுவாசம் உள் இடும்/வெளிவிடும் அளவு மாறும்......உடலின் நெருப்பு சக்தி உடல் மாறுபாட்டால் மாறுபடும்......
எனவே குழந்தை கரு உண்டாகும் நேரம் சரிவர கணிக்க முடியாது எனபதால் குழந்தை பிறக்கும் நேரம் கணக்கில் எடுத்து கொள்ள படுகிறது.....