Thursday, February 6, 2014

எனக்கு ஏன் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கலை?



நாம் நம்மை பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள்ளலாம்..ஆனால் உலகம் நம்மை பற்றி என்ன நினைக்கிறது ..உண்மையில் நம் உண்மை நிலை என்ன என்பதை நம் ஜாதகம் சொல்லி விடும்


நாங்களும் பையனுக்கு அன்சு ஆறு வருஷமா கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறோம் என்பவரா நீங்கள்...அப்போ இந்த பதிவ படிங்க ..தெளிவு பெருங்க...


ஜாதகத்தில் லக்கனம் நன்றாக இருந்தால் தான் பையன் நல்லவன் தெளிவான சிந்தனை கொண்டவன் போன்ற கருத்துக்கள் உங்களை சுற்றி இருப்பவரிடம் இருக்கும்.

இரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் தான் பையன் (or பொண்ணு) பாக்குறதுக்கு லட்சனமாக இருக்கிறான்(ள்) என்ற கருத்து மக்களிடம் இருக்கும்.அந்த பையனோட குடும்பம் நல்ல குடும்பம் என்ற பெயர் ஊர் மத்தியில் இருக்கும்.

மூன்றாம் பாவம் நன்றாக இருந்தால்தான் பையன் வல்லவன் என்ற பெயர் இருக்கும்.

நான்காம் பாவம் நன்றாக இருந்தால்தான் "பையன் கார் கூட வெச்சு இருக்கான்.சொந்த வீடு இருக்கு" என்பன போன்ற பேச்சுகள் உலா வரும்.பையனோட அம்மா ரொம்ப நல்லவா (பொண்ணுக்கு மாமியார் :) )என்ற பேர் இருக்கும்.

ஐந்தாம் பாவம் நன்றாக இருந்தால் பையன் யோக்கியன் (ஒழுக்கமான பையன் ) என்ற இமேஜ் இருக்கும்.

ஆறாம் பாவம் நன்றாக இருந்தால் தான் கடன்/நோய்/வழக்கு இல்லாமல் இருக்கும்.அதெல்லாம் இருந்தா உண்மை தெரின்சா எந்த பொண்ணு தான் கல்யாணம் செய்துக்க முன் வருவா??கல்யாணம் முடின்சாலும் பிரச்சினை தானே?

ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் தான் நண்பர்கள்,சமுதாய தொடர்பு நன்றாக இருக்கும்.

எட்டாம் பாவம் நன்றாக இருந்தால் தான் ஆயுள் பலம் நன்றாக இருக்கும்.[[ஏழு எட்டு பாவம் நன்றாக இருந்தால் தான் தேனிலவு நன்றாக இருக்கும்]].

ஒன்பதாம் பாவம் நன்றாக இருந்தால் தான் பையனுக்கு அப்பன் பாட்டன் சொத்து எல்லாம் இருக்குபா என்ற பேச்சு இருக்கும்.

பத்தாம் பாவம் நன்றாக இருந்தால் தான் "அவனுக்கு என்னப்பா கை (பை) நெறைய சம்பாதிக்கறான்..." என்பார்கள்...பையன் என்ன வேலை பாக்கிறான் என்பது தானே பெண் வீட்டார் முதல் கேள்வி...கல்யாணத்துக்கு முதலில் பார்க்க வேண்டிய பாவமாக பத்தாம் பாவம் ஆகி விட்டது.. :)

பதினோராம் பாவம் நன்றாக இருந்தால் தான் அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டுவாள்.

பணிரெண்டாம் பாவம் நன்றாக இருந்தால் தான் கல்யாணத்துக்கு அப்புறம் கூட நிம்மதியா தூங்க முடியும்..

இல்லைனா எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் வேண்டும் என்ற பாட்டு தான்....

கல்யாண சந்தையில் மேற்கண்டவற்றின் தகுதிக்கு ஏற்ப (மார்க்100 க்கு எவ்வளவு :) ) என்பதுக்கு ஏற்ப மணமகன்/மணமகள் கிடைக்கும்.

இதற்கு அப்புறம் தான் பத்து பொருத்தம் எல்லாம் workout ஆகும்..!!!!

விநாயகருக்கு இரண்டு மனைவி ஏன்?



தென் இந்தியாவில் விநாயகர் பிரமச்சாரி...வட இந்தியாவில் விநாயகருக்கு இரண்டு மனைவிகள்...ஒருவேளை இந்த இரண்டு மனைவிகள் தொல்லை தாங்காமல் வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவுக்கு ஓடி வந்து விட்டாரா :) 


உண்மை அது அல்ல..உண்மையில் இரண்டு மனைவிகள் என்பது நமது உடம்பில் சூட்சமாக இயங்குகிற வலது இடது நாடிகள்...வலது இடது சுவாசங்கள்....நமது மூச்சு காற்றை கவனித்து பார்த்தால் அது சில நேரங்களில் மூக்கின் வலதுபுறமும்,சில நேரங்களில் மூக்கின் இடதுபுற துளை வழியாகவும் இடைவெளி இல்லாமல் வந்து சென்று கொண்டே இருக்கும்..

இதன் அடிப்படையில் நமது இடது வலது மூளை செயல் பட்டு கொண்டே நம் எண்ணங்களை தூண்டி கொண்டே இருக்கும். இவர்கள் தான் இரு பொண்டாட்டிகள்..இவர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க (விடுதலை) பெற வேண்டும் எனில் வலது இடதுக்கு நடுநிலையான சூஷ்மனா நாடியை விழிக்க செய்ய வேண்டும்..

அப்போது மட்டுமே இடைவிடாத மன இயக்கம் என்ற பொண்டாட்டி தொல்லை-இல் இருந்து விடுதலை பெற முடியும்...இதன் சூட்சம குறியீடு தான் விநாயகர்,முருகர் போன்றோருக்கு இரண்டு மனைவிகள் எனபது..

ஜோதிடத்தின் எல்லை!!!

பிரம்மத்தை தவிர எல்லாவற்றிக்கும் ஒரு எல்லை உண்டு.....மருத்துவம்,அறிவியல் போல ஜோதிடத்துக்கும் ஒரு எல்லை உண்டு......எல்லாவற்றுக்கும் ஜோதிடத்தில் பலன் சொல்ல முயன்றால் முடிவு ஏமாற்றம் அளிக்கும்....

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் வேறு ஒரு கோளையோ, நட்சத்திரத்தையோ, நட்சத்திர மண்டலத்தையோ மையமாக வைத்தே சுற்றுகின்றன. காரணம் அவைகளுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசை (Gravitation). இந்த ஈர்ப்பு விசை அவற்றை, ஒன்றுடன் ஒன்றாக இணைத்து இயங்க வைத்துக் கொண்டிருக்கும்.

சூரியன் போன்ற எண்ணிலடங்கா நட்சத்திரங்களைக் கொண்டது இந்தப் பால் வெளி மண்டலம் கேலக்ஸி (Galaxy).

நமது பால்வெளி மண்டலத்தில்(Galaxy) உள்ள நட்சத்திரத்தின் எண்ணிக்கையே இன்னும் விஞ்ஞானக் கணக்கீட்டால்கூட கண்டறியாத நிலையில் எத்தனை பால்வெளி மண்டலங்கள், அதில் உள்ள நட்சத்திரங்கள் எவ்வளவு என்பது பற்றி அறிவது தற்போதைய காலகட்டத்தில் உள்ள அறிவியல் வளர்ச்சியில் சிரமமான காரியம்.






மேலும், கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள்  மிதந்துகொண்டு இருக்கும் 
இருப்பிடம் பேரண்டம்(Universe).

பூமி மற்றும் இதர கிரகங்கள் சூரியனை சுற்றுகிறது... சூரிய மண்டலம்(குடும்பம்) ஆனது நம்முடைய Galaxy யை சுற்றி வருகிறது

ஒரு வீட்டின் கூரையில் மாட்டப் பட்டிருக்கும் மின்சார விசிறி (Fan) கிடையாகச்சுற்றுகிறது. நமது பால் வெளி மண்டலமும்(Galaxy ) அப்படித்தான் சுற்றுகிறது.ஆனால் நமது சூரியன், பால்வெளி மண்டலத்தில் இருந்து கொண்டே,மேசையில் இருக்கும் மின்விசிறி (Table Fan) போல, பால்வெளிமண்டலத்துக்குச் செங்குத்தாக சுற்றுகிறது.






https://www.youtube.com/watch?v=0jHsq36_NTU    


இந்த link இல் சென்று பார்த்தால் நன்கு புரியும்

நமது பூமிக்கு நடுவாக பூமத்திய ரேகை இருப்பது போல, பால்வெளி மண்டலத்துக்கும் நீளமான, ஒரு மத்திய ரேகை உண்டு. இதை Galactic Equator என்று சொல்வார்கள்.
நமது சூரியன் இப்படிப் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையை (Galactic Equator) சந்திக்க எடுக்கும் காலம்  26,000 வருடங்கள்.

ஏறக்குறைய 170 பில்லியன் பால்வெளி மண்டலங்கள்(Galaxy ) நம்முடைய (!!) Universe -ல் உள்ளன

(There are probably more than 170 billion galaxies in the observable universe -http://en.wikipedia.org/wiki/Galaxy)

இது போல பல பேரண்டங்கள்(universe) உள்ளன. :)
மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்......

Reference:

Wednesday, February 5, 2014

ஜோதிடம் உண்மையா?!

எங்கேயோ சுற்றி கொண்டும் இருக்கும் கிரகங்கள் மனிதன் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா?? 
ஜோதிடம் எல்லாம் பொய் என்று சொல்லுபவர்கள் இருக்ககத்தான் செய்கிறார்கள்...
கிழ் கண்ட படத்தை பார்த்தால் உண்மை என்ன என்று புரியும்....
படத்துக்கு விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்...







கிரகங்கள்,நட்சத்திர கூட்டங்கள் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டு தான் உள்ளன....ஜோதிடம் பொய் அல்ல....ஜோதிடம் சொல்லும் சிலர் தான் சில நேரங்களில் தவறாக கணித்து விடுகின்றனர்..