Friday, April 24, 2015

மகா பெரியவா -சில கேள்விகள்


//////////ஒரு சமயம், பெரியவர் கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தார். அங்குள்ள வீட்டில், சிறுவனும், அவனது பாட்டி யும் இருந்தனர். பெரியவரை கண்டதும், ஓடி வந்து நமஸ்கரித்தனர். பெரியவர் மூதாட்டியிடம், நேற்று இரவு உன் பேரன், நம் வீட்டுக்கு பெரியவர் வருவாரா என்று கேட்டான் இல்லையா! நீ அதற்கு என்ன சொன்னாய்? என்றார். பெரியவா! உங்களுக்கு பாதபூஜை செய்யவோ, பிøக்ஷ செய்யவோ (தானம் தருதல்) எங்களிடம் வசதியில்லை, அதனால், நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரமாட்டீர்கள் என்று சொன்னேன், என்றார் மூதாட்டி. பெரியவர் சிரித்தார். பார்த்தாயா! இப்போது நான் வந்துவிட்டேன்! என்றவர், பையனை அழைத்து, என்னை தரிசிக்க நீ எதுவும் செய்ய வேண்டாம். உன் வீட்டுக்கு வருவேனா என்று சந்தேகப் பட்டாய்! இப்போ, நான் உன் வீட்டுக்குள்ளேயே வரப் போறேன். நீ அனுமதிப்பாயா? என்றவர், அவனது பதிலுக்கு காத்திராமல் வீட்டுக்குள் வந்து சிறுவனை ஆசிர்வதித்தார்.

முக்காலமும் உணர்ந்த ஞானியாக காஞ்சிப் பெரியவர் திகழ்ந்தார்//////////

//////////அவரது ஞானத்தைப் பிரதிபலிக்கும், ஒரு சம்பவத்தை கேளுங்கள். பெரியவர், தன் சீடர்கள் ஆந்திர மாநிலத்திற்கு புனித யாத்திரை கிளம்பினார். காஞ்சி புரத்திலிருந்து கிளம்பி வேலூர் வழியாக சித்தூர் செல்வதாக திட்டம். குதிரைகளும், ஒரு யானையும் அவர்களுடன் சென்றன. வேலூரை அடுத்து உள்ள சேம்பாக்கம் கிராமத்தை அடைந்த போது, யானை நகர மறுத்தது. அதைப் பிடித்து தள்ளினால், பயங்கரமாகபிளிறியது. இந்த விபரம் மகா பெரியவருக்கு தெரிவிக்கப் பட்டது. அவர் சிறிதும் சலனமின்றி ஓரிடத்தைச் சுட்டிக் காட்டி, அந்த இடத்தைச் சுத்தப்படுத்துங்கள், என்று சீடர்களுக்கு உத்தரவு போட்டார். சீடர்களும் அவ்விடத்தைச் சுத்தப்படுத்தினர். புதருக்குள் ஒரு ஸ்ரீசக்ரம் (சுவாமியின் சக்தியை உள்ளடக்கிய யந்திரம்) இருந்தது. அதை எடுத்து சுத்தம் செய்து பிரார்த்தித்தார். அவ்வூரில் உள்ள விநாயகர், மேற்கூரை இல்லாமல் இருப்பவர். அவரது பார்வையும் வானத்தைப் பார்க்கும் நிலையில், மேல்நோக்கி இருக்கும். அந்த விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கப்பட்டது. பூஜை முடிந்ததும், தகராறு செய்த யானை எழுந்து நின்று பயணத்தைத் தொடர்ந்தது. மறைந்து கிடக்கும் ஸ்ரீசக்ரத்தை வெளிக்கொண்டு வரவும், விக்னேஸ்வர பூஜை முடித்து, எவ்வித விக்னமும் (தடையும்) இல்லாமல், பயணம் நடந்து முடியவுமே இந்த அதிசயம் நிகழ்ந்ததை ஊராரும் கண்டனர்////////////

இது மட்டும் அல்ல ,இது போல பல கதைகள் உண்டு ..... காது கொடுத்து கேட்டால் அசால்டாக அளந்து விடுவார்கள்... :D

இப்படி பட்ட முக்காலமும் உணர்ந்த பெரியவா ஏன் தன் மடத்துக்கு களங்கம் விளைவிக்க கூடிய ஜெயெந்திரர் அவரை தலைவராக நியமித்தார் ???

சங்கராமன் கொலை வழக்கு உலகம் அறிந்த ஒன்று ..அது மட்டும் அல்லாமல் அனுராதா ரமணன் என்ற எழுத்தாளர் கொடுத்த பாலியல் தொடர்பான புகார் பெரும்பாலானவர் அறிந்த ஒன்று ...

சரி ஜெயெந்திரர் ஒரு ஆன்மிகவாதி எனில் தனக்கு வரும் ஆபத்துக்கு பரிகாரம் எதுவும் செய்து கொள்ள வில்லையா ??

சரி சங்கர மடத்துக்கு வர இருந்த அவ பெயரை மகா பெரியவா முக்காலம் உணராமல் விட்டு விட்டாரா ??

சரி மகா பெரியவா போல ஜெயந்திரர் முக்காலம் உணர்ந்து உரைத்த சம்பவம் ஒன்று உண்டா .....?? இப்போது பெருமையாக சொல்லிக்கொள்ள ஒரு விசயமும் இல்லை .... எனவே முன்பு நடந்த சில சாதாரண சம்பவங்களை ஒரு கும்பல் மிகை படுத்தி சொல்லி கொண்டு உள்ளார்கள் ......

ஒரு மடத்துக்கு ஒரு தலைவர் இருக்க இன்னொரு தலைவர் ஆக விஜெயெந்திரர் நியமிக்க பட்ட காரணம் தெரியுமா ?? ஹி ஹி

சந்திர சேகர சரஸ்வதி அவர்களை பெரியவர் ,எளிமையானவர் என்ற விதத்தில் மதிக்கிறேன் ......அனால் அவர் முக்காலம் உணர்ந்தவர் என்று சொல்லவ து மிகை படுத்த பட்ட ஒன்று .....


அப்படி அவர் முக்காலம் உணர்ந்தவர் எனில் என் நியாயமான கேள்விக்கு நியாயமான முறையில் மகா பெரியவா ரசிகர்கள் பதில் தர வேண்டுகிறேன் .....

இது எதோ என் தனிப்பட்ட கேள்வி அல்ல ...நிறைய பேருக்கு உள்ள நியாமான சந்தேகம் ......

ஒரு உண்மை என்ன எனில் நம்மை விட நாய்க்கு கேக்கும் திறன் 100 மடங்கு அதிகம் .....

பறவைகள் ,பாம்புகளுக்கு நில நடுக்கம் வருவதை முன் கூட்டியே உணரும் ஆற்றல் உண்டு ..... ஒரு இடத்தில நில நடுக்கம் வருகிறது எனில் அவைகள் சில மணி நேரத்துக்கு முன்னே அந்த இடத்தை விட்டு விலகி சென்று விடும் ....

மனிதன் அந்த ஆற்றல் குறைவாக உள்ள காரணம் இயற்கையோடு இயற்கையாக வாழாமல் இப்படி செயற்கையாய் கதை அளந்து கொண்டும் ...யாரோ ஒருவர் மகான் என்றும் நினைத்து கொண்டு உள்ள அறியாமையே ....

என்னுடைய கேள்விகளுக்கு சில ஆதார பதிவுகள் கீழே....

http://suunapaana.blogspot.in/2009/08/blog-post.html                                                                                                                   http://www.vinavu.com/2011/08/26/jeyandran-scam/

Friday, April 3, 2015

மீண்டும் ராகு-கேது


                  

1, 5, 9 தின் ஆரம்ப முனையை (அஸ்வினி மகம் மூலம்)கேதுவே ஆள்கிறார் .....ராகு 3, 7 ,11 பாவத்தை ஆள்கிறார் (திருவாதிரை ,சுவாதி சதயம் )..3 7 11 .பாவம் என்பது தன்னம்பிக்கை,வீரியம் ,வெற்றி எனபது அனைவரும் அறிந்ததே .......புற வெற்றி கர்மாவை சேர்க்கவே செய்கிறது ........ ராகு முடிந்த வரை ஆன்மிகத்தில் நுழைவதை தாமத படுத்தவே செய்யும்.....ஆன்மிகத்துக்கு கேதுவும் ,புற வாழ்க்கை வெற்றிக்கு ராகுவும் ஆதிக்கம் செய்கிறார்கள் ......

மேலும் சுக்கிரன் கேதுவின் நட்சதிரத்தை அடுத்து வருகிறது ....கேதுவே மீண்டும் ஆத்மா சுக்கிலதுக்குள் (சுக்கிரன்) நுழைய வேண்டிய அவசியம் உள்ளதா ,இல்லையா என்பதை காட்டுகிறது .... சூரியனின் நிழல் ராகு ...ஆத்மாவை மறைக்கும் மாயைகள் எல்லாம் ராகுவே....
சந்திரனின் நிழல் கேது ..மனதை மறைப்பது .... அதாவது மனதை அழித்து மனமற்ற நிலையை தருவது கேது ...
எனவே ஆன்மிகத்தில்/வாழ்வில் மாயையை ஏற்படுத்துவது ராகு , தெளிவை ஏற்படுத்துவது கேது....

******************************************************************************************

இப்பிரபஞ்சம் பேராற்றுலுடனும் பேரறிவுடனும் இயங்குகிறது...ஆற்றல் (ராகு ) அறிவு (கேது ) நமக்கு இப்பிரபஞ்சத்தில் இருந்து ராகு-கேது பெற்று தருகிரார்கள் ... ,

ஆற்றல் (ராகு ) அதிகம் இருப்பின் அகங்காரம் வருவது மனித (மன ) இயல்பு... எனவே ராகுவின் எதிர் முனை யான கேது (அறிவு ) அதை சமன் படுத்த வேண்டும் ..எனவே தான் ராகு கேது நேர் எதிர் செயல் பட்டு இப்பிரபஞ்சதில் சமநிலையை ஏற்படுத்துகிறது ....

அகோரிகள்,நாகாக்கள், பைராகிகள்,சக்தி உபாசர்கள் ராகுவின் ஆதிகத்திலும் , ஞானிகள் கேதுவின் ஆதிகத்திலும் ,சித்தர்கள் ,யோகிகள் ராகு -கேது இரண்டின் ஆதிக்கம் நிறைந்தவர்கள் என்பது என் புரிதல்.....

**********************************************************************************************
இது ஒரு ஆராய்ச்சி கட்டுரை மட்டுமே .. உங்கள் ஒத்த/ மாற்று கருத்துகளை பகிருங்கள் ஆத்ம நண்பர்களே ...

Thursday, March 12, 2015

ராகு கேதுவும்-சூட்சம காரண சரீரமும்




கால சக்கரத்தில் 8ம் பாவம் ஸ்தூல உடல் உயிரை குறிக்கிறது .7ம் பாவம் உடல் உயிர் பிரிவதை காட்டுகிறது .9ம் பாவம் உடலில் இருந்து உயிர் பிரிந்த பின் சூட்சம சரீரத்தை குறிப்பிடுகிறது.எனவே தான் 9ம் பாவத்தை முன்னோர் சூட்சம சரீர(பித்ரு) தோஷம் உள்ளதா என ஆராயப்படுகிறது.

ராகுவே மரண காரகன் என அழைக்க படுகிறார்.சூட்சம சரீரதுக்கு காரண மாகிறார் .சிலர் வாழும் காலத்தில் சூட்சம சரீரத்தை ஸ்தூலசரீரத்தை விட்டு பிரித்து பிரபஞ்சம் எங்கும் சுற்றி வரும் ஆற்றல் பெற்று இருப்பர்..இவர்கள் ராகு வின் ஆதிக்கம் மிகுந்து காணபடுபவர்கள் ஆக இருப்பர் .

சூட்சம சரிர வலுவை பொறுத்தே உடல் வலு இருக்கும்..எனவே தான் கால சக்கரத்தில் 3 7 11 (திருவாதிரை ,சுவாதி ,சதயம்-போக சக்தி ,போகத்தை அனுபவித்தல் ,திருப்தி )என்ற காம திரிகோணத்தை ராகு ஆள்கிறார்.

ஒரு குறிப்பிட்ட நோய் வருகிறது எனில் அதன் பாதிப்பு சூட்சம உடலில் ஏற்கனவே தெரிய ஆரம்பித்து விடும் ..சூட்சம சரீரதுக்கு எங்கே இருந்து ஆற்றல் வருகிறது அல்லது எது காரணமாக உள்ளது எனில் அதுவே காரண சரீரம்,. இதுக்கு காரண கர்த்தா கேது ..


எண்ணங்கள் அற்ற தூக்கத்தில் அல்லது எண்ணங்கள் அற்ற விழிப்பு நிலையில் காரண சரீரம் பிரம்மத்தில் இருந்து ஆற்றலை சூட்சம சரீரம் வழி ஸ்தூலசரீரதுக்கு கொடுக்கிறது .

பிறவிக்கான காரணத்தை கேது குறிபிடுகிறார் எனவே தான் கால சக்கரத்தில் முதல் நட்சத்திரம் கேதுவின் அஸ்வினி .. மேலும் 1ம் பாவத்துக்கு விரய பாவமான 12ல் கேது இருப்பின் பிறவிக்கு இனி எந்தவொரு காரணமும் இல்லை மோட்சம் என்பதாகிறது ...எனவே தான் கால சக்கரத்தில் 1 5 9 (அஸ்வினி ,மகம் ,மூலம் -தற்போதைய பிறவி காரணம் ,வரும் பிறவி காரணம்,முன் பிறவி காரணம் )என்ற திரி கோணத்தை ஆள்கிறார்..

ராகு கேது நிழல் கிரகம் எனவும் ,அவர்கள் வலுவானவர்கள் என்று சொல்ல இதுவே காரணமாக இருக்க முடியும் ..

ராகு சனி என்ற கர்ம காரகனுடன் சேரும் போது காமத்தை (ஆசையை ) வரம்புக்கு மீறி அனுபவிப்பதும் ,மேலும் துர் மரணம் , அல்லது போதையில் கூட சிலர் சூட்சம உடலை கண்டு வருவது போன்றவை நடக்கும்..ராகு சனி சேரும் இடத்தை பொருத்து பலன் மாறுபடும் ...

கேது சனி யுடன் சேரும் போது காமத்தை (ஆசையை ) ,கர்மத்தை அனுபவித்து அழிக்கிறார்..
கேதுவின் போதை என்பது ஞானிகள்,யோகிகள் மோன நிலை என்ற தியான போதையில் இருப்பது போன்று ..
ராகுவின் போதை என்பது ஒரு திரைபட நடிகர் புகழ் ,பெண் போன்ற போதையில் தன்னை மறப்பது போன்று..இது பொது பலன் ..மற்ற கிரக சேர்க்கைக்கு ஏற்ப போதை யின் அளவு ,காரணம் மாறுபடும் ..


சித்தர்கள், யோகிகள் குரு+கேது+சனி சேர்க்கை எனில் ,போலி 
ஞானிகள், திரை பட நடிகர்கள்,   சுக்கிரன்+ராகு+சனி  என்று சொல்ல முடியும் ..
ராகு கேது அமிர்தம் உண்டவர்கள் ,அழிவில்லை என்று மறைமுகமாக கூற காரணம் சூட்சம ,காரண சரீரம்  சிவ நிலை என்னும் பிரம்மத்திடம் இருந்து அமிர்தம் ஆகிய ஆற்றலை பெரும் தகுதி கொண்டது என்பதலாயே இருக்க முடியும்..

Wednesday, March 4, 2015

அம் மனம்




மனம் அஉம் என்ற நாதத்துடன் சேரும் போது அம் மனம் ஆகிறது .... அம் மனம் மே ஞானம்.... மனதை அம் -மனம் ஆக்காமல் துணி இல்லாமல் சுற்று வதால் ஞானம் உண்டாகுமா ??

ஆண் மூலம் அரசாளும்...பெண் மூலம் நிர் மூலம்-ஏன்?





ஆண் மூலம் அரசாளும்...பெண் மூலம் நிர் மூலம்.... இதன் உண்மை பொருள் என்ன ?? பெண் கிரகம் ஆன சந்திரன்(சந்திர கலை ) கேது(அக்னி கலை)க்கு உரிய மூல நட்சத்திரத்தில் நிற்கும் போது மனதை அழித்து நிர் மூலம் ஆக்கும்... ,மேலும் இது குருவுக்கு உரிய தனுசு ஆதலால் மன மற்ற ஞான நிலையை தரும்.... ஞானிகளில் பலர் மூல நட்சத்திரத்தில் பிறந்து உள்ளது குறிப் பிடத்தக்கது ..... இதே போல ஆண் கிரகமான சூரியன்(சூரிய கலை) மூல நட்சத்திரம் தில் நிற்கும் போது , சூரியன் குரு இணைவின் காரணமாக அரச பதவிகளில் அமரும் வாய்ப்பு உண்டாகும் ..இதுவே ஆண் மூலம் அரசாளும். என்பதன் பொருள் ..

Saturday, June 21, 2014

ஷேர் மார்க்கெட் லாபமா நஷ்டமா ?!!!


சூதாட்டம், திடீர் தான லாபம்,ஷேர் மார்க்கெட் போன்றவற்றுக்கு ராகுவே காரன கர்த்தா....

மேலும் இங்கே 2 இம் பாவம் 11இம் பாவத்தை ஆராய்ந்து பார்க்க்க வேண்டும்....


ஷேர் மார்க்கெட் எடுத்து கொண்டால் 2 இம் பாவம் ஜாதகரின் பணத்தை குறிக்கும்....

8 இம் பாவம் இவர் யாருக்கு share விற்பனை அல்லது வாங்கும் நபர் கம்பனி யின் பணத்தையை குறிக்கும்...

6 இம் பாவம் போட்டியாளர்க்கு விரயத்தை குறிக்கும்....12 இம் பாவம் ஜாதகருக்கு விரயத்தை குறிக்கும்....

11 இம் பாவம் ஜாதகருக்கு வெற்றியை தரும்...


5 இம் பாவம் போட்டியாளருக்கு வெற்றியை தரும்...

ராகு 2, 5 ,8 ,11 இம் பாவத்தில் ஏதாவது ஒன்றுக்கு உப நட்சத்திர அதிபதி ஆகி 5 8 12 க்கு குறிப்பினர் அனால் சூதாட்டம் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் நஷ்டம் .....இதே ராகு 2 6 11 க்கு குறிப்பினர் அனால் லாபம் .......


மற்ற பாவங்கள் கலந்து இருக்கும் பொது லாபம் நட்டம் கலந்து வரும் .....

சர இஸ்திர உபய ராசி போன்றவற்றில் ராகு நிற்பதை பொறுத்து லாபம் நஷ்டம் அளவு மாறுபடும்..

ராகுவை தவிர மற்ற கிரகங்களையும் பார்க்க வேண்டும் என்றாலும் ...ராகு இது போன்ற விஷயங்களில் ஒரு தீவிரத்தன்மையை தருவார்...

Saturday, June 14, 2014

திருமண பொருத்தம்-பொன்னையா சுவாமிகள்

மானிடனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் உலகில் உயிர் வாழும் வரையில் நீக்கமற நிறைந்து இருக்க்வேண்டியது வாழ்க்கையை சீறும் சிறப்போடும் வ்ழிநடத்திச்செல்ல உரிமையுள்ள மணவி, ஜீவனம் செய்வதற்க்கு தொழில், இவற்றை அனுபவிக்க ஆயுள் இவை இன்றியமையாத்தாக் ஒரு ஜாதகருக்கு அமையும்.

ஜாதகங்களில் 7ஆம் இடமே விவாகம் சம்பந்தமாகவும், கணவன், மணைவி இவர்களின் அன்னியோண்யம், ஒற்றுமையை உணர்த்தக்கூடிய ஸ்தானமகும்.ஏனென்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்ப வாழ்க்கையை நட்த்த பெணகள்தான் பிரதாண்மடைகின்றனர்.

இல்லால் அகத்திலிருக்க் இல்லாத்தொன்ற்ம்மில்லை. என்பதற்கேற்ப பெண்களே கிரகலட்சுமியாகவும்,தர்மபத்தினியாகவும்,விளங்குகின்றனர்.இப்படி பட்ட பெஇத்ண்கள் அமைவது என்பது அவரவர் பூர்வ புண்ணியத்தின் அடிப்படை யிலும் ,கர்மவினைப்படியும், விதிப்படியும்தான் அமையும் என்றா லும், அவ்விதியின் பலனை முன்கூட்டியே நிணயிக்கும் ஆற்றல் தெய்வஞ் ஞர்கள் எனும் ஜோதிடபெருமக்களுக்கே உண்டு. அவர்கள்தான் ஜாதகங்களை நன்கு ஆராய்ந்தரிந்து விவாகத்தின் நிலைதனை நிலை நிறுத்த ஆண்டவ்ன் பொறுப்பை அவர்களிடம் கொடுத்திறுக்கிறான்.

ஜாதகம பார்க்காமல் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்பவர்கள் சிலர் மேன்மையும் ஜாதகம் பார்த்து விவாகம் செய்து கொள் பவர்கள் சிலர் சுகமென்பதையே அறியாது ஒற்றுமையின்றி தவிப்பதும் நாம் கண்கூடாக பார்க்கமுடிக்றது. இவற்றின் காரணம் தான் என்ன்?

ஜாதகத்தை ஆராய்ந்து விவாகத்தை நிணயிப்பது நம்மீது குற்றமா? அல்லது இது நல்ல இடம் என்ன்வானாலும் பரவாயில்லை இந்த் பெண்னைத் தான் மணைவியாக்கவேண்டும் என்ப் பந்த்தாசை பிடித்த பெற்றோர்களின் குற்றமா? ஆனால் தீய பலன்கள் ந்டந்தேறினால் விதி என்ற் சொல்லை பயண்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்து அந்த் தம்பதிகளூக்கு ஏதேனும் வாழ்க்கையில் தீங்கு நடந் தால் அந்த பாவம் ந்ம்மைத்தான் சாறூம். அது மகாபாவம்! சரி, செவ்வாய் தோஷத்த்தை மட்டும் முன்நிறுத்தி பேசுவதும் மற்ற கிரகங்களால் தாரதோஷ ம் ஏற்படாத்து போல் சிலர் கிரகங்களை ஆய்வு செய்கின்றனர். செவ்வாய் மட்டுமின்றி மற்றகிரகங்களுக்கும் தாரநாசம் செய்யும் ஆற்றல் உண்டு.

பொதுவாக் திருமண பொருத்தம் பார்க்கும்போது ஆயுள், ஒற்றுமை, யோகம், இவைகளை பொருத்தமாக் உடைய ஜாதகங்களையே சேர்த்து விவாகம் செய்தால் அந்தசதிபதிகளின் வாழ்க்கையில் ந்ல்ல பலன்களை அடைய காரணமாகிறது. அதற்க்குத்தான் திருமணபொருத்தம் பார்க்கபடுகின் றது.திருமணம் என்றவுடன் ஆண்,பெண் இரு ஜாதகங்களையும் ந்ம் முன்னோ ர்களின் கூற்றுப்படி அல்லது அவர்களின் வழிப்படி ந்ட்சத்திர பொருத்த்த்தை யே பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு பொருத்தம் பார்த்து விவாகம் செய்து கொண்டவ்ர்களில் பெரும்பாலோர் வாழ்க்கையில் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது இதன் காரணமென்ன? .நட்சத்திர பொருத்த்த்தை விட கிரக் பொருத்தமே சதிபதிகளின் ந்ல்வாழ்விற்க்கு வழிகாட்டகூடியதாக இருக்கும

ந்ம் ஜோதிட சாஸ்திரத்தின் விதிப்படி பொருத்தங்கள் பார்த்து இனை த்து வைத்தாலும் கிரகங்கள் பலரை பலவிதமான நிலைக்கு கொண்டு சென்று கஷ்டப்படுத்துவது ஏன் என்றால் ஜாதக் ஆய்வில் நாம்செய்யும் தவறுதான்.

திருமணபொருத்த்த்தில் அதிஉன்னத நிலையை அடைவது லக்ன்மே. லக்னம்தான் ஒருவனை திருமணம் செய்யத்தகுதி உடையவனாக், குடும்பத் தை காப்பாற்றும் ஆற்றல் உடையவனாக், சமுகத்தில் மரியாதை பெறக்கூடி ய கர்ம மேன்மை கொண்டவனா என்பதையெல்லாம் விளக்கும் ஓர் அற்புத பொக்கிசமாகும். அதனால் லக்னத்தை முதலில் ஆய்வு செய்து இந்த பெண்ணிற்க்கு இந்த மணமகன் பொருத்தமாணவன். இவனுக்கு திருமணம் செய்துவைத்தால் கணவன் மணைவிகுள் ஒற்றுமையும் எல்லாவிதமான யொ கங்களும் ஆயுள் பலமும் பெறுக்கிறது. எனவே இவனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற் முடிவுக்கு வரவேண்டும்.இல்லையேல் அதனை விலக்கி வேரோரு பொருத்தம் பார்க்கவேண்டும்.

1)ஒரு பெண்ணின் ஜாதகத்தில், ஜாதகரின் ல்க்னாதிபதியோ அல்லது ல்க்னாதிபதி நின்ற சாரநாதன் 6,8,12,ஆமிடங்களீல்,நின்றாலும், ஜாதகரின் ஜாதகத்தில் பெண்ணின் லக்னாதிபதியோ, லக்னாதிபதி நின்றசாரநாதன் 6,8,12 ஆமிடங்களில் நின்றாலும் இருவருக்கும் ஒற்றுமை இருக்காது

2)பெண்ணின் ஜாதகத்தில் பையனின் 6,12 க்குடையவர்கள் ந்ன்றாலும், பையனின் ஜாதகதில் பெண்ணின் 6,12 க்குடையவர்கள் நின்றாலும் ஒற்றுமை இருக்காது

3)பெண்ணின் ஜாதகத்தில் லக்னதில் சனியிருந்து ஆணின் ஜாதகத்தில் 7ல் செவ்வாய் நின்றாலும், பெண்ணின் ஜாதகத்தில் சனியிருக்கும் வீட்டில் ஆணின் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தாலும், 6,8,12 ஆம் இடங்களில் இவர் கள் சேர்க்கை இருப்பினும், இவ்ர்களது தசா, புத்தி காலங்களில் வேதனையை கொடுத்துவிடுகிறது.

4) ஆணின் ஜணன காலதசநாதன்,பெண்ணின் ஜாதகத்தில் 6,8,12, குடை யவர்களாக்வோ, பெண்ணின் ஜணன கால தசாநாதன் ஆணின் ஜாதகத்தில் 6,8,12 க்குடையவராகவோ இருப்பின் இல்வாழ்க்கை பிரிவினையை கொடு த்துவிடுகிணறது.. ஜாதகத்தில் ல்க்னரீதியாக் பொருத்தம் பார்ப்பதில் சில அனுகுமுறையை நாம் மாற்றி அமைக்கவேண்டும்.

5)ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் இருவருடைய லக்னாதிபதியோ, இராசியதிபதியோ ,அதேபோன்று சப்தமதிபதிகளும் ச்ஷ்டாஷ்டம்ம் கூடாது.

6) இருவருடைய ஜாதகங்களிலும் லக்னாதிபதியோ,சப்தமஸ்தானதி பதியோ ஜென்ம நட்சத்திரதிபதியோ 4,10, எனும் கேந்திரம் பெற்றால்,இருவரு க்குள்ளும் நேசம் குறைந்து இருக்கும்.சலிப்புத்தன்மை குடிகொள்ளும்.

7) இருவருடைய இராசி, லக்னம், 6,8,12, அமைதல் கூடாது.
8)பெண்ணின் ஜாதகத்தில் 7 ல்நிற்க்க்கூடிய கிரகத்தின் நட்சத்திரத்தில் பிற்ந்த வரனை இனத்தாலும், ஆணின் ஜாதகத்திலும் 7ல் நிற்க கூடிய கிரக்த் தின் நட்சத்திரதில் பிறந்த பெண்ணை இனத்தாலும், ஒருவருக்கொருவர் ஒற் றுமையுடன் பிரியாது வாழ்வர்.

9) 7ல் நிற்க்க்கூடிய கிரகம் நின்ற சாரநாதனின் லக்னத்தில் பிறந்தவர்க ளாக் இருந்தாலும்,1,3,5,7,9,11,ல் நிற்க்க்க்கூடிய கிரகத்தின் ந்ட்சத்திரத்தில் பிற ந்த ஜாதக்கர்களையும் வாழ்வில் இனத்தால் பிரியமாகவும்,சந்தொஷமாகவும், வாழ்வ்தை அனுபத்தில் பார்க்கமுடிகிறது.

10) இராசிகளும், லக்னமுமும்,ஒருவருக்கொருவர் சப்தஸ்தான்மாக அமைந்தால் அதில் எந்த மாருபடும் இல்லை.

11) ஆணின் லக்னாதிபதி பெண்ணின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 மிடங் களில் இருந்தாலும், அல்லது பெண்ணின் லக்னாதிபதி ஆணின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆம் இட்த்தில் இருந்தாலும் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

12)பெண்ணின் ஜென்ம இரசியானது ஆணின் ஜென்ம ல்க்னமாகவோ , ஆணின் ஜென்ம இராசியானது பெண்ணின் ஜென்ம லக்னமாகவோ அமைந் தால் ஒருவருக்கொருவர் ஆழ்மான அன்புடன் வாழ்வதை பார்க்கலாம்.

13)ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற வீட்டில் பெண்ணின் லக்ன்மாக வோ, இராசியாகவோ அமைவது நேசித்த வாழ்வுக்கு வழிபிறக்கும்.

14) இருவருடைய ஜாதகத்திலும் ந்டப்புதசாநாதனும், வௌங்கால தசா நாதனும் 6,8,12 க்குடையவர்களாயின் பிரிவிணையை கொடுத்துவிடும்.

15) ஜென்ம லக்னத்திலோ,இரண்டாம் இட்த்திலோ சனியிருந்து, பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் எவ்வளவு செல்வந்தர்களாக் இருந்தாலும் கஷ்ட்த்தை கொடுத்துவிடுகிறது. பொருத்த்த்தில் இது அவசியம்.

16)பெண்ணின் ஜாதகத்தில் 4 ல் சூரியன்,செவ்வாய்,புதன்,சந்திரன் நிற்க ஆணின் ஜாதகத்தில் சனியோ,கேதுவோ இருப்பின் கணவன் ந்ல்லறம் தேடி பற்ற்ற்று துறவரம் பூனுகிறான்.

17) பெண்ணின் ஜாதகத்தில் 10ல் சனியிருந்து ஆணின் ஜாதகத்தில் அதே இராசியில் புதன் கேது இருப்பின் கணவனை ஆண்மையற்றவனாக்கி இருவ ரையும் பிரித்துவிடுகிறது.

18) பெண்ணின் ஜாதகத்தில் 5ல் சனி,செவ்வாய் நிற்க ஆண் ஜாதகத்தில் அதேவீட்டில் சூரியனும், புதனும் நிற்க குழ்ந்தை பிறந்து இறந்துகொண்டே இருக்கும். இதை இணைப்பது பாவமாகும்.

19) 5,11,மிடங்களில் குரு,சுக்கிரன் நிற்க பிறந்த ஜாதகர்கள் வாழ்வில் சட்ட த்த்ற்ல்லு புறம்பான் முறையில் இரண்டுதாரம் அமைய இருபாலருக்குக்மே செய்துவிடுகிறது.

20)இருவர் ஜாதகத்திலும் சுக்கிரன், சந்திரன் இனவு ந்ல்ல இணக்கத்தை யும் அன்பையும் கொடுக்கும்.

21) பெண்ணின் ஜாதகத்தில் ஏழுக்குடையவர் குரு,புதன், சுக்கிரன்,சந்திரன் இவர்களுல் யாரெனும் 4,7,10,5 ஆகிய் ஸ்தான்ங்களில் அல்லது, உச்சஸ்தான த்டில் அல்லது தன் சொந்தவீட்டிலிருந்தால் சகல சொளபாக்கியங்களுடன் வாழ்வார்கள்.

22) களத்திர காரகன் சுக்கிரன் இருவருடைய ஜாதகத்திலும் அதாவது பெண்னின் ஜாதகதில் நிற்க்கும் சுக்கிரன் ஆணின் ஜாதகத்தில் 1,5,9,11 மிடங்க ளில் இருந்தாலும்,ஆணின் ஜாதகத்தில் நிற்க்கும் சுக்கிரன் பெண்ணின் ஜாதக தில் 1,5,9,11 மிடங்களில் இருப்பின் அன்புடன் வாழ்வார்கள்.

23) எந்த இராசி எந்த ல்க்னமாயினும்,துலாஇராசியில் சுக்கிரன், ராகு,சனி செவ்வாய் இவர்களின் சமாகமத்தை கர்ப்பாயசத்டை உண்டு செய்யும். திருப் தியற்ற வாழ்க்கையை கொடுத்துவிடும்.
24) ஒவ்வொரு ஜாதகத்திலும் துலாத்தில் 2 பாகை முதல் 5 பாகைவ்ரை எந்த கிரகம் நிற்க்கிறது என்பதை இருபாலருக்கும் பார்த்து அதற்க்கு ஏற்றார் போல் திருமணப்பொருத்தம் பார்க்கவேண்டும்.

25) பெண்ணின் பிறந்த ஜென்ம நட்சத்திரநாதன் ஆணின் ஜாதகத்தில் நீச் சமாகியிருந்தாலும், ஆணின் ஜென்ம ந்ட்சத்திரநாதன் பெண்ணின் ஜாதகத்தில் நீச்சமாகியிருந்தாலும், தசவித பொருத்தம் இருந்தாலும் ,கிரக பொருத்தம் இருந்தாலும், இணக்க்கூடாது.

-பொன்னையா சுவாமிகள் 
http://swarnakodi.blogspot.in/2014/02/blog-post_12.html