Saturday, June 21, 2014

ஷேர் மார்க்கெட் லாபமா நஷ்டமா ?!!!


சூதாட்டம், திடீர் தான லாபம்,ஷேர் மார்க்கெட் போன்றவற்றுக்கு ராகுவே காரன கர்த்தா....

மேலும் இங்கே 2 இம் பாவம் 11இம் பாவத்தை ஆராய்ந்து பார்க்க்க வேண்டும்....


ஷேர் மார்க்கெட் எடுத்து கொண்டால் 2 இம் பாவம் ஜாதகரின் பணத்தை குறிக்கும்....

8 இம் பாவம் இவர் யாருக்கு share விற்பனை அல்லது வாங்கும் நபர் கம்பனி யின் பணத்தையை குறிக்கும்...

6 இம் பாவம் போட்டியாளர்க்கு விரயத்தை குறிக்கும்....12 இம் பாவம் ஜாதகருக்கு விரயத்தை குறிக்கும்....

11 இம் பாவம் ஜாதகருக்கு வெற்றியை தரும்...


5 இம் பாவம் போட்டியாளருக்கு வெற்றியை தரும்...

ராகு 2, 5 ,8 ,11 இம் பாவத்தில் ஏதாவது ஒன்றுக்கு உப நட்சத்திர அதிபதி ஆகி 5 8 12 க்கு குறிப்பினர் அனால் சூதாட்டம் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் நஷ்டம் .....இதே ராகு 2 6 11 க்கு குறிப்பினர் அனால் லாபம் .......


மற்ற பாவங்கள் கலந்து இருக்கும் பொது லாபம் நட்டம் கலந்து வரும் .....

சர இஸ்திர உபய ராசி போன்றவற்றில் ராகு நிற்பதை பொறுத்து லாபம் நஷ்டம் அளவு மாறுபடும்..

ராகுவை தவிர மற்ற கிரகங்களையும் பார்க்க வேண்டும் என்றாலும் ...ராகு இது போன்ற விஷயங்களில் ஒரு தீவிரத்தன்மையை தருவார்...

Saturday, June 14, 2014

திருமண பொருத்தம்-பொன்னையா சுவாமிகள்

மானிடனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் உலகில் உயிர் வாழும் வரையில் நீக்கமற நிறைந்து இருக்க்வேண்டியது வாழ்க்கையை சீறும் சிறப்போடும் வ்ழிநடத்திச்செல்ல உரிமையுள்ள மணவி, ஜீவனம் செய்வதற்க்கு தொழில், இவற்றை அனுபவிக்க ஆயுள் இவை இன்றியமையாத்தாக் ஒரு ஜாதகருக்கு அமையும்.

ஜாதகங்களில் 7ஆம் இடமே விவாகம் சம்பந்தமாகவும், கணவன், மணைவி இவர்களின் அன்னியோண்யம், ஒற்றுமையை உணர்த்தக்கூடிய ஸ்தானமகும்.ஏனென்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்ப வாழ்க்கையை நட்த்த பெணகள்தான் பிரதாண்மடைகின்றனர்.

இல்லால் அகத்திலிருக்க் இல்லாத்தொன்ற்ம்மில்லை. என்பதற்கேற்ப பெண்களே கிரகலட்சுமியாகவும்,தர்மபத்தினியாகவும்,விளங்குகின்றனர்.இப்படி பட்ட பெஇத்ண்கள் அமைவது என்பது அவரவர் பூர்வ புண்ணியத்தின் அடிப்படை யிலும் ,கர்மவினைப்படியும், விதிப்படியும்தான் அமையும் என்றா லும், அவ்விதியின் பலனை முன்கூட்டியே நிணயிக்கும் ஆற்றல் தெய்வஞ் ஞர்கள் எனும் ஜோதிடபெருமக்களுக்கே உண்டு. அவர்கள்தான் ஜாதகங்களை நன்கு ஆராய்ந்தரிந்து விவாகத்தின் நிலைதனை நிலை நிறுத்த ஆண்டவ்ன் பொறுப்பை அவர்களிடம் கொடுத்திறுக்கிறான்.

ஜாதகம பார்க்காமல் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்பவர்கள் சிலர் மேன்மையும் ஜாதகம் பார்த்து விவாகம் செய்து கொள் பவர்கள் சிலர் சுகமென்பதையே அறியாது ஒற்றுமையின்றி தவிப்பதும் நாம் கண்கூடாக பார்க்கமுடிக்றது. இவற்றின் காரணம் தான் என்ன்?

ஜாதகத்தை ஆராய்ந்து விவாகத்தை நிணயிப்பது நம்மீது குற்றமா? அல்லது இது நல்ல இடம் என்ன்வானாலும் பரவாயில்லை இந்த் பெண்னைத் தான் மணைவியாக்கவேண்டும் என்ப் பந்த்தாசை பிடித்த பெற்றோர்களின் குற்றமா? ஆனால் தீய பலன்கள் ந்டந்தேறினால் விதி என்ற் சொல்லை பயண்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்து அந்த் தம்பதிகளூக்கு ஏதேனும் வாழ்க்கையில் தீங்கு நடந் தால் அந்த பாவம் ந்ம்மைத்தான் சாறூம். அது மகாபாவம்! சரி, செவ்வாய் தோஷத்த்தை மட்டும் முன்நிறுத்தி பேசுவதும் மற்ற கிரகங்களால் தாரதோஷ ம் ஏற்படாத்து போல் சிலர் கிரகங்களை ஆய்வு செய்கின்றனர். செவ்வாய் மட்டுமின்றி மற்றகிரகங்களுக்கும் தாரநாசம் செய்யும் ஆற்றல் உண்டு.

பொதுவாக் திருமண பொருத்தம் பார்க்கும்போது ஆயுள், ஒற்றுமை, யோகம், இவைகளை பொருத்தமாக் உடைய ஜாதகங்களையே சேர்த்து விவாகம் செய்தால் அந்தசதிபதிகளின் வாழ்க்கையில் ந்ல்ல பலன்களை அடைய காரணமாகிறது. அதற்க்குத்தான் திருமணபொருத்தம் பார்க்கபடுகின் றது.திருமணம் என்றவுடன் ஆண்,பெண் இரு ஜாதகங்களையும் ந்ம் முன்னோ ர்களின் கூற்றுப்படி அல்லது அவர்களின் வழிப்படி ந்ட்சத்திர பொருத்த்த்தை யே பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு பொருத்தம் பார்த்து விவாகம் செய்து கொண்டவ்ர்களில் பெரும்பாலோர் வாழ்க்கையில் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது இதன் காரணமென்ன? .நட்சத்திர பொருத்த்த்தை விட கிரக் பொருத்தமே சதிபதிகளின் ந்ல்வாழ்விற்க்கு வழிகாட்டகூடியதாக இருக்கும

ந்ம் ஜோதிட சாஸ்திரத்தின் விதிப்படி பொருத்தங்கள் பார்த்து இனை த்து வைத்தாலும் கிரகங்கள் பலரை பலவிதமான நிலைக்கு கொண்டு சென்று கஷ்டப்படுத்துவது ஏன் என்றால் ஜாதக் ஆய்வில் நாம்செய்யும் தவறுதான்.

திருமணபொருத்த்த்தில் அதிஉன்னத நிலையை அடைவது லக்ன்மே. லக்னம்தான் ஒருவனை திருமணம் செய்யத்தகுதி உடையவனாக், குடும்பத் தை காப்பாற்றும் ஆற்றல் உடையவனாக், சமுகத்தில் மரியாதை பெறக்கூடி ய கர்ம மேன்மை கொண்டவனா என்பதையெல்லாம் விளக்கும் ஓர் அற்புத பொக்கிசமாகும். அதனால் லக்னத்தை முதலில் ஆய்வு செய்து இந்த பெண்ணிற்க்கு இந்த மணமகன் பொருத்தமாணவன். இவனுக்கு திருமணம் செய்துவைத்தால் கணவன் மணைவிகுள் ஒற்றுமையும் எல்லாவிதமான யொ கங்களும் ஆயுள் பலமும் பெறுக்கிறது. எனவே இவனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற் முடிவுக்கு வரவேண்டும்.இல்லையேல் அதனை விலக்கி வேரோரு பொருத்தம் பார்க்கவேண்டும்.

1)ஒரு பெண்ணின் ஜாதகத்தில், ஜாதகரின் ல்க்னாதிபதியோ அல்லது ல்க்னாதிபதி நின்ற சாரநாதன் 6,8,12,ஆமிடங்களீல்,நின்றாலும், ஜாதகரின் ஜாதகத்தில் பெண்ணின் லக்னாதிபதியோ, லக்னாதிபதி நின்றசாரநாதன் 6,8,12 ஆமிடங்களில் நின்றாலும் இருவருக்கும் ஒற்றுமை இருக்காது

2)பெண்ணின் ஜாதகத்தில் பையனின் 6,12 க்குடையவர்கள் ந்ன்றாலும், பையனின் ஜாதகதில் பெண்ணின் 6,12 க்குடையவர்கள் நின்றாலும் ஒற்றுமை இருக்காது

3)பெண்ணின் ஜாதகத்தில் லக்னதில் சனியிருந்து ஆணின் ஜாதகத்தில் 7ல் செவ்வாய் நின்றாலும், பெண்ணின் ஜாதகத்தில் சனியிருக்கும் வீட்டில் ஆணின் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தாலும், 6,8,12 ஆம் இடங்களில் இவர் கள் சேர்க்கை இருப்பினும், இவ்ர்களது தசா, புத்தி காலங்களில் வேதனையை கொடுத்துவிடுகிறது.

4) ஆணின் ஜணன காலதசநாதன்,பெண்ணின் ஜாதகத்தில் 6,8,12, குடை யவர்களாக்வோ, பெண்ணின் ஜணன கால தசாநாதன் ஆணின் ஜாதகத்தில் 6,8,12 க்குடையவராகவோ இருப்பின் இல்வாழ்க்கை பிரிவினையை கொடு த்துவிடுகிணறது.. ஜாதகத்தில் ல்க்னரீதியாக் பொருத்தம் பார்ப்பதில் சில அனுகுமுறையை நாம் மாற்றி அமைக்கவேண்டும்.

5)ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் இருவருடைய லக்னாதிபதியோ, இராசியதிபதியோ ,அதேபோன்று சப்தமதிபதிகளும் ச்ஷ்டாஷ்டம்ம் கூடாது.

6) இருவருடைய ஜாதகங்களிலும் லக்னாதிபதியோ,சப்தமஸ்தானதி பதியோ ஜென்ம நட்சத்திரதிபதியோ 4,10, எனும் கேந்திரம் பெற்றால்,இருவரு க்குள்ளும் நேசம் குறைந்து இருக்கும்.சலிப்புத்தன்மை குடிகொள்ளும்.

7) இருவருடைய இராசி, லக்னம், 6,8,12, அமைதல் கூடாது.
8)பெண்ணின் ஜாதகத்தில் 7 ல்நிற்க்க்கூடிய கிரகத்தின் நட்சத்திரத்தில் பிற்ந்த வரனை இனத்தாலும், ஆணின் ஜாதகத்திலும் 7ல் நிற்க கூடிய கிரக்த் தின் நட்சத்திரதில் பிறந்த பெண்ணை இனத்தாலும், ஒருவருக்கொருவர் ஒற் றுமையுடன் பிரியாது வாழ்வர்.

9) 7ல் நிற்க்க்கூடிய கிரகம் நின்ற சாரநாதனின் லக்னத்தில் பிறந்தவர்க ளாக் இருந்தாலும்,1,3,5,7,9,11,ல் நிற்க்க்க்கூடிய கிரகத்தின் ந்ட்சத்திரத்தில் பிற ந்த ஜாதக்கர்களையும் வாழ்வில் இனத்தால் பிரியமாகவும்,சந்தொஷமாகவும், வாழ்வ்தை அனுபத்தில் பார்க்கமுடிகிறது.

10) இராசிகளும், லக்னமுமும்,ஒருவருக்கொருவர் சப்தஸ்தான்மாக அமைந்தால் அதில் எந்த மாருபடும் இல்லை.

11) ஆணின் லக்னாதிபதி பெண்ணின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 மிடங் களில் இருந்தாலும், அல்லது பெண்ணின் லக்னாதிபதி ஆணின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆம் இட்த்தில் இருந்தாலும் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

12)பெண்ணின் ஜென்ம இரசியானது ஆணின் ஜென்ம ல்க்னமாகவோ , ஆணின் ஜென்ம இராசியானது பெண்ணின் ஜென்ம லக்னமாகவோ அமைந் தால் ஒருவருக்கொருவர் ஆழ்மான அன்புடன் வாழ்வதை பார்க்கலாம்.

13)ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற வீட்டில் பெண்ணின் லக்ன்மாக வோ, இராசியாகவோ அமைவது நேசித்த வாழ்வுக்கு வழிபிறக்கும்.

14) இருவருடைய ஜாதகத்திலும் ந்டப்புதசாநாதனும், வௌங்கால தசா நாதனும் 6,8,12 க்குடையவர்களாயின் பிரிவிணையை கொடுத்துவிடும்.

15) ஜென்ம லக்னத்திலோ,இரண்டாம் இட்த்திலோ சனியிருந்து, பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் இருந்தால் எவ்வளவு செல்வந்தர்களாக் இருந்தாலும் கஷ்ட்த்தை கொடுத்துவிடுகிறது. பொருத்த்த்தில் இது அவசியம்.

16)பெண்ணின் ஜாதகத்தில் 4 ல் சூரியன்,செவ்வாய்,புதன்,சந்திரன் நிற்க ஆணின் ஜாதகத்தில் சனியோ,கேதுவோ இருப்பின் கணவன் ந்ல்லறம் தேடி பற்ற்ற்று துறவரம் பூனுகிறான்.

17) பெண்ணின் ஜாதகத்தில் 10ல் சனியிருந்து ஆணின் ஜாதகத்தில் அதே இராசியில் புதன் கேது இருப்பின் கணவனை ஆண்மையற்றவனாக்கி இருவ ரையும் பிரித்துவிடுகிறது.

18) பெண்ணின் ஜாதகத்தில் 5ல் சனி,செவ்வாய் நிற்க ஆண் ஜாதகத்தில் அதேவீட்டில் சூரியனும், புதனும் நிற்க குழ்ந்தை பிறந்து இறந்துகொண்டே இருக்கும். இதை இணைப்பது பாவமாகும்.

19) 5,11,மிடங்களில் குரு,சுக்கிரன் நிற்க பிறந்த ஜாதகர்கள் வாழ்வில் சட்ட த்த்ற்ல்லு புறம்பான் முறையில் இரண்டுதாரம் அமைய இருபாலருக்குக்மே செய்துவிடுகிறது.

20)இருவர் ஜாதகத்திலும் சுக்கிரன், சந்திரன் இனவு ந்ல்ல இணக்கத்தை யும் அன்பையும் கொடுக்கும்.

21) பெண்ணின் ஜாதகத்தில் ஏழுக்குடையவர் குரு,புதன், சுக்கிரன்,சந்திரன் இவர்களுல் யாரெனும் 4,7,10,5 ஆகிய் ஸ்தான்ங்களில் அல்லது, உச்சஸ்தான த்டில் அல்லது தன் சொந்தவீட்டிலிருந்தால் சகல சொளபாக்கியங்களுடன் வாழ்வார்கள்.

22) களத்திர காரகன் சுக்கிரன் இருவருடைய ஜாதகத்திலும் அதாவது பெண்னின் ஜாதகதில் நிற்க்கும் சுக்கிரன் ஆணின் ஜாதகத்தில் 1,5,9,11 மிடங்க ளில் இருந்தாலும்,ஆணின் ஜாதகத்தில் நிற்க்கும் சுக்கிரன் பெண்ணின் ஜாதக தில் 1,5,9,11 மிடங்களில் இருப்பின் அன்புடன் வாழ்வார்கள்.

23) எந்த இராசி எந்த ல்க்னமாயினும்,துலாஇராசியில் சுக்கிரன், ராகு,சனி செவ்வாய் இவர்களின் சமாகமத்தை கர்ப்பாயசத்டை உண்டு செய்யும். திருப் தியற்ற வாழ்க்கையை கொடுத்துவிடும்.
24) ஒவ்வொரு ஜாதகத்திலும் துலாத்தில் 2 பாகை முதல் 5 பாகைவ்ரை எந்த கிரகம் நிற்க்கிறது என்பதை இருபாலருக்கும் பார்த்து அதற்க்கு ஏற்றார் போல் திருமணப்பொருத்தம் பார்க்கவேண்டும்.

25) பெண்ணின் பிறந்த ஜென்ம நட்சத்திரநாதன் ஆணின் ஜாதகத்தில் நீச் சமாகியிருந்தாலும், ஆணின் ஜென்ம ந்ட்சத்திரநாதன் பெண்ணின் ஜாதகத்தில் நீச்சமாகியிருந்தாலும், தசவித பொருத்தம் இருந்தாலும் ,கிரக பொருத்தம் இருந்தாலும், இணக்க்கூடாது.

-பொன்னையா சுவாமிகள் 
http://swarnakodi.blogspot.in/2014/02/blog-post_12.html

Friday, May 30, 2014

என்ன கொடுமை சரவணன் இது....!!!


ஒருவர் ஜோதிட மகா குரு மற்றும் ஆதித்யா குரு என்று சொல்லி கொள்கிறார்.....ஜோதிடத்தில் பல்வேறு வகைகள் உள்ளன....அனைத்தும் அறிந்தவர் யாரும் இல்லை என்றே சொல்லலாம்....ஜோதிட மகா குரு என்று சொல்பவர் ராசி பலன் தான் அதிகம் எழுதுகிறார்.......மகா குரு என்று சொல்கிறாரே இவர் அனைத்து ஜோதிட முறைகளை அறிந்தவார என்ற கேள்வி நமக்கு எழுகிறது.....இல்லை KP ஜோதிடம் போல ஏதேனும் புதிய முறையை கண்டறிந்தவரா என்ற கேள்வி நமக்கு வருகிறது.....
இவர் சில கருத்துகளை நேரடியாக சொல்லாமல் தலையை சுற்றி மூக்கை தொடுகிறார்...அடிக்கடி சூட்சமம் சூட்சமம் என்று bulid up வேறு......இவரை சூட்சம காந்த் என்றே சொல்லலாம்........  :)  :)

இவரிடம் ஓரிரு முறை கேள்வி கேட்டேன்....உடனே FaceBook இல்
 block செய்து விட்டார்..... என்ன கொடுமை சரவணன் இது....!!!அண்ணன் ( சூட்சம காந்த்)பேச்சுக்கு return பேச்சு வரவே கூடாது ..சரியா... :)

Saturday, May 24, 2014

ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தகுழந்தைகள் பலன் மாறுபாடு


கேள்வி:

திருச்சியில் பிறந்த இரட்டை குழந்தைகள் இருவருடைய உடல் நலத்திலும் பிரச்னை. இருவருக்கும் அறுவை சிகிச்சை கூட வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் ,.

குழந்தைகளின் ஆயுள் எப்படி உள்ளது?
இருவருக்குமே அறுவை சிகிச்சை தேவை படுமா அல்லது யாரவது ஒருவருக்கு மட்டும் அறுவை சிகிச்சை தேவை படுமா?

முக்கியமான தகவல் இருவருக்கும் ஒரு நிமிட பிறந்த நேர வித்தியாசம் மட்டுமே .

பிறந்த தேதி. 14/6/2012
முதல் குழந்தை பிறந்த நேரம்:18.14 pm
இரண்டாவது குழந்தை பிறந்த நேரம் :18.15 Pm

பிறந்த ஊர்: Trichirapalli .

(மேற்கண்ட கேள்வி KP ஜோதிட Expert,FB நண்பர் சரவணராஜ் அவர்கள் ஆய்வுக்காக கேட்ட கேள்வி)


என்னுடைய பதில்:

இரண்டாவது குழந்தைக்கு செவ்வாய் 6 இம் பாவ உப நட்சத்திர அதிபதியாக வந்து மற்றும் 10 பாவ உப நட்சத்திர அதிபதியாகவும் வருவதால்,6 இம் பாவத்தின் பலனை 10 பாவம் விருத்தி செய்யும் என்பதால் நோய்யின் தன்மை தீவிரம் அடைவதையும்...செவ்வாய் அறுவை கிகிச்சை காரகன் என்பதால் அது அறுவை கிகிச்சைக்கு கொண்டு சென்று இருக்கும்....மேலும் செவ்வாய் 6இம் பாவ குறிக்காட்டிகளான சுக்கிரன் கேதுவின் நட்சத்திரம் உப நட்சத்திரத்தில் உள்ளது...

முதல் குழந்தைக்கு செவ்வாய் 6 இம் பாவ உப நட்சத்திர அதிபதியாக வந்து சந்திரன் 10 பாவ உப நட்சத்திர அதிபதியாக வந்து உள்ளது..இங்கே சந்திரன் 5இம் பாவ குறிக்காட்டி ஆவதுடன் 6இல் உள்ள கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பினும் கூட தன் சொந்த உப நட்சத்திரத்தில் நின்று 5பாவ பலனை தருவார்...6 பாவம் நோய்வாய்ப்படுதல்,5 இம் பாவம் குணமடைவதை காட்டுகின்றன....இந்த குழந்தைக்கு அறுவை கிகிச்சை தேவை பட்டு இருக்காது...

இங்கே ஒரு நிமிட இடைவெளியில் குழந்தைகள் பிறந்து இருப்பினும் கூட, பத்தாம் பாவ உப நட்சத்திரம் மாற்றம் பெறுவது...இரு குழந்தைகளுக்கும் வெவ்வேறு கர்ம வினைகளை குறிகாட்டுகின்றன..


நடந்த உண்மை:இரண்டாவது குழந்தைக்கு தான் இருதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தேர்யது .

Sunday, May 18, 2014

கேள்வி பதில்!!



கேள்வி:ஒரு குழந்தை ஒரு மருத்துவமனையில் பிறகிறது. அதேநேரத்தில் அதே மைக்ரோ,நேனோ விநாடியில் அதே மருத்துவமனையில் இனொரு குழந்தை பிறக்கிறது.மிகசரியாக குழந்தைகளின் ஜாதகம் ஒற்றி போகிறது . இருபினும் இவர்களின் வாழ்கை வெவ்வேறு திசையில் பரினமிகிறது. இது எவ்வாறு நடகிறது . ---???

பதில்:ஜோதிடம் என்பது ஆகாயம்(காலம்) மட்டும் அல்ல....நிலம் நீர் காற்று நெருப்பு அனைத்தையும் உள் அடக்கி பார்க்க வேண்டும்....
இரண்டு குழந்தைகள் ஒரே மருத்துவமனையில் பிறந்தாலும் ...இரண்டு குழந்தைகளின் நிலம்(உடல்) வேறு.....நீர்(சுக்கிலம்,கரு முட்டை இணைவு)கரு உண்டான நேரம் வேறு....சுவாசம் உள் இழுக்கும் நேரம் வேறு.....உடல் மாறுபாட்டால் சுவாசம் உள் இடும்/வெளிவிடும் அளவு மாறும்......உடலின் நெருப்பு சக்தி உடல் மாறுபாட்டால் மாறுபடும்......
எனவே குழந்தை கரு உண்டாகும் நேரம் சரிவர கணிக்க முடியாது எனபதால் குழந்தை பிறக்கும் நேரம் கணக்கில் எடுத்து கொள்ள படுகிறது.....

Monday, April 28, 2014

நரேந்திர மோடி ஜாதகம் -ஒரு ஆய்வு..




இவரது ஜென்ம நட்சத்திரம் சனி ஆகி அவர் சுக்கிரன் உப நட்சத்திரத்தில் நின்றார்...இவர்கள் 3 4 7 10 12 குறிப்பினர் ஆவது ஜாதகரின் தகிரியம்,ரிஸ்க் எடுத்தல்,தன்நம்பிக்கை,பொது வாழ்வில் வெற்றி,புகழ் போன்றவற்றை காட்டுகிறது..

12ம் பாவ குறிப்பினர் ஆவது மட்டும் சிறு குறைபாடு..இவர் எதிரிகளிடம் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.

லக்ன உப நட்சத்திர அதிபதி செவ்வாய் 10 பாவத்துக்கும் உப நட்சத்திர அதிபதியாக வருவது சிறப்பு..அரசியலில் இவர் வீரத்துடன் செயல் ஆற்றுவதற்க்கு இந்த அமைப்பு காரணம் ஆகிறது...செவ்வாய் 8 12 க்கும் நட்சத்திர அதிபதியாக வருவது விபத்து,உயிர் கண்டம் போன்றவற்றை தரும்...செவ்வாய் இவருக்கு 1 2 4 5 6 12 குறிப்பினர் ஆவது நெறைய எதிரிகளை பெற்று தருவார் என்பதை காட்டுகிறது..

இவருக்கு 2 5ம் பாவங்கள் கேது சனி ஆள்வது குடும்பம் இல்லை.. பத்தாம் பாவத்தில் ஐந்து கிரகங்கள் உள்ளன.... சுக்கிரன் சனி புதன் சூரியன் கேது உள்ளன....சூரியன் கேது 10ல் உள்ளதால் குடும்பம் இல்லாதவராகவும் அதே சமயம் அரசாள்பவராகவும் உள்ளார்..


நடப்பு சந்திர திசை 1 3 4 7 9 10 12 தொடர்பு பெறுவதும்,ராகு புத்தி 3 4 10 தொடர்பு பெறுவதும் இவர் பிரதமர் ஆவதை உறுதி செய்கின்றன..ராகு 3 4 10 தொடர்பு பெறுவது அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து பதவி ஏற்பதை காட்டுகிறது.. 8 வருடம் கழித்து வரும் (2021 அக்டோபர் க்கு பிறகு வரும் காலம்) செவ்வாய் திசை தான் இவருக்கு சோதனை காலம்...செவ்வாய் 3ம் பாவ உப நட்சத்திர அதிபதியின் நட்சத்திரத்தில் இருந்து தன் சொந்த உப நட்சத்திரத்தில் இருந்து 1 2 4 5 6 8 12 தொடர்பு பெற்று திசை நடத்துவது நோய்,விபத்து போன்ற உயிர் கண்டங்களை தரும்....

Thursday, April 10, 2014

KP ஜோதிடம் அடிப்படை


பாரம்பரிய முறையில் சந்திரன் நின்ற நட்சத்திரம் வைத்து திஷா,புத்தி,அந்தரம்,சூட்சமம் கணிக்கிறார்கள் ...சந்திரன் நின்ற நட்சத்திரம் டிக்ரீ துல்லியமாக இருப்பதால் தான் இதன் அடிப்படையில் திசா,புத்தி,அந்தரம்,சூட்சமம் அனைத்தும் நாம் அறிகிறோம்.. இதையே நாம் ஏன் மற்ற கிரகங்கள் மற்றும் பாவங்கள் எந்த நட்சத்திரத்தில் நிற்கின்றன என்பதை டிக்ரீ துல்லியமாக கணிக்க கூடாது என ஜோதிட மாமேதை திரு KSK அவர்கள் நினைத்தார்....அதன் அடிப்படையில் உருவானது தான் KP SYSTEM.இப்போது கிரகங்கள் ,பாவங்கள் போன்றவை சந்திரன் நிற்கும் நட்சத்திரம் டிக்ரீ துல்லியமாக தெரிவதை போல தெரிந்து கொள்ள முடியும்....அனைத்து கிரகமும்,12 பாவமும் எதன் நட்சத்திரம்(திசை),புத்தி(உப நட்சத்திரம்),அந்தரம்(உப உப நட்சத்திரம்),சூட்சமம்(உப உப உப நட்சத்திரம்) நிற்கிறது என்று தெரிந்து விடுகிறது...
எனவே பாரம்பரிய முறை போல மேலும் கிரகங்களை நவ அம்சம்,சப்த அம்சம் என பிரிக்க வேண்டியதில்லை...
என்னுடைய மானசீக ஜோதிட குரு இவரே..

Wednesday, April 2, 2014

பொது பலனும் அதன் பின் உள்ள உண்மையும்.......


சித்தர் பாடல் கிரக சேர்க்கை அனைத்தும் பலன் பொருந்தி வருவதில்லை....சித்தர் இறுதியில் என்ன சொல்லுகிறார் என்றால் லக்னம், பாக்கிய இஸ்தானம் ,கிரக வலிமை பார்த்த பின் தான் கிரக சேர்க்கைக்கு பலன் சொல்ல சொல்லி உள்ளார்.....
உயிர் (லக்னம்,பாக்கியம்) இல்லாத பிணதுக்கு பலன் சொல்லுவது போல தான் வெறும் கிரக சேர்க்கைக்கு பலன் சொல்லுவது என்பது.....இறுதியில் அந்த சித்தர் சொன்னார் இந்த சித்தர் சொன்னார் என்றால் நம் ஆட்கள் பேசாமல் சென்று விடுவார்கள்....அந்த சித்தர் சொன்னார் இந்த சித்தர் சொன்னார் என்றால் நமக்குள் உள்ள சித்தர் என்ன தூங்கி கொண்டு உள்ளாரா ???

சித்தர்கள் சரியாக தான் சொல்லி சென்று உள்ளார்கள்......அதை சரியாக புரிந்து கொள்ளாதது நம் தவறு ஆகவே இருக்கும்...நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்று சொன்னவர் சிவ வாக்கியார்......அதன் உட்பொருளை உணர வேண்டும்..

Wednesday, March 19, 2014

ஜோதிட கணக்கும்-ஆண்டவன் கணக்கும்!!!


முதலில் ஜோதிடம் சொல்லும் போது ஆதி
அந்தமற்ற தன்மைக்கு தான் ஜாதகம் போட வேண்டும்...பின் இந்த பேரண்டத்துக்கு ஜாதகம் போட வேண்டும்...பின் அண்டதுக்கு ஜாதகம் போட வேண்டும்....
பின் சூரிய குடும்பம், பூமி, இந்தியா,நமது மாநிலம்,நமது இடம்,தனிமனிதன் இந்த வரிசையில் தான் ஜாதகம் கணிக்க வேண்டும்....
அப்படி கணித்தால் தான் ஜாதக கணக்கு முதன்மை பெரும்....இல்லை என்றால் இறைவன் கணக்கு தான் முதன்மையானது....

ஆதிஅந்தமற்ற தன்மைக்குஜாதகம் போட முடியுமா???
பேரண்டத்துக்கு ஜாதகம் போட முடியுமா???

எனவே ஜோதிட கணக்கு சில நேரங்களில் இறைவனால் பொய்த்து போகும்...
இல்லை என்றால் ஜோதிடன் கடவுள் ஆகி விட முடியுமே..


இறைவன் கணக்கே முதன்மையானது..அவன் அருள் பெறுவோம்!!!

Tuesday, March 18, 2014

துர் மரணம் ஒரு ஆய்வு



மேற்கண்ட ஜாதகரின் மரணம்(ஜனவரி 2014) காட்டு யானை தாக்கி ஏற்பட்டது..

இது குறித்த எனது ஆய்வு..

லக்னம் 8 இம் பாவ தொடர்பு..இது இயற்கைக்கு மாறான வழி மரணம்...  நடப்பு தசா நாதன் குரு (மாரகாதிபதி) சுய சாரம் பெற்று ,உபநட்சத்திர அதிபதி புதன்(1,10) ஆனார்...புதனை இயக்கும் உபநட்சத்திர அதிபதியும் குரு ஆனார்...நடப்பு சந்திர புத்தி நாதன் செவ்வாய் சாரம் (8) பெற்று சுக்கிரன் உபநட்சத்திர அதிபதி ஆனார்..சுக்கிரனை இயக்கும் உபநட்சத்திர அதிபதி சந்திரன் ஆனார்....


குரு சந்திரன் இருவரும் லக்னதுக்கு 7,8 ஆக திஷா புத்தி நடந்தது மரணத்துக்கு காரணம் ஆயிற்று....


குரு சந்திர கஜ(யானை) கேசரி யோகம்(குரு சந்திரன் ->குருவுக்கு 9இல் சந்திரன் என்பதை கவனிக்க(ராகுவுடன்)) துர்பலன் ஆக யானையால் இறக்க நேரிட்டது...லக்ன உப நட்சத்திர அதிபதி ராகு(1) சந்திரன் (நின்ற நட்சத்திர அதிபதி-8) இணைவும் உள்ளது..

Thursday, March 13, 2014

தந்தை ஸ்தானம் 4-ம் பாவம்-பெண்களுக்கு!!!


ஒருவருக்கு நான்காம் இடம் தாய் ஸ்தானத்தை குறிக்கிறது.அதற்கு நேர் ஏழாம் பாவம் ஆன பத்தாம் பாவம் தந்தை ஸ்தானம் ஆக வேண்டும்.9 பாவத்தை தந்தை ஸ்தானம் ஆக பார்ப்பதற்க்கு காரணம்...9 பாவம் 10 இம் பாவத்துக்கு விரய பாவமாக வருவதால் ஆகவே இருக்க வேண்டும்.9 பாவம் தந்தைக்கு முன்பு வந்து போனவர்களை (முன்னோர்கள்) குறிக்கும்...
தந்தை என்பவர் முன்னோர் என்பதை விட ஜாதகரின் கர்மத்தை 10 இம் பாவம் வழி நடத்துபவர் ஆவார்..தந்தை என்பவர் முதலில் 10இம் பாவ பலனை வழி நடத்தி பின் 9 பாவமாக பின் நின்று மறைகிறார்.

தாய் 4 இம் பாவாக வழியில் அன்பின் வழி வழிநடத்துபவர் ஆகிறார்.4,10 பாவகம் இரண்டும் சம சப்தமாக(180 Degree) இயங்கும்..

ஒரு ஆண் குழந்தைக்கு இது பொருந்தும்..பெண் குழந்தைக்கு இது பொருந்துமா??

இங்கே ஆண் பெண் என்று பார்ப்பதை விட ஆண் தன்மை பெண் தன்மை என்றும் பார்க்க வேண்டி உள்ளது..வலது நாடி அதிகம் செயல்பட்டால் ஆண்தன்மை என்றும்,இடது நாடி அதிகம் செயல் பட்டால் பெண் தன்மை என்றும் சொல்லலாம்.எனவே ஆணுக்கு ராசியின் வல சுற்று ஆன 4,10 ம் பாவத்தை தாய் தந்தை இஸ்தானம் என்று கொள்ள வேண்டும்..
பெண்ணுக்கு ராசியின் இட சுற்று 4,10 பாவம் வல சுற்றில் 4 இம் பாவம் தந்தை ஸ்தானம் ஆக வருகிறது..10 இம் பாவம் தாய் ஸ்தானம் ஆக வருகிறது.பெண்ணை தாய் வழி நடத்துபவராக இருப்பார்.

மேலும் 100 வருடங்களுக்கு முன் சமூகத்தில் பெண்கள் வேலைக்கு செல்வது ஒதுக்கப்பட்டது..தற்போது "பெண்தன்மை என்பது ஆண் போல் செயல்படு" என்பது போல உள்ளது..சமூகம் எப்படி வேண்டுமானாலும் நாளை மாறும்...ஆனால் ராசி வலம்,இடம் நமது சுவாச வலம்,இடம் என்பது தான் ஆண் பெண் தன்மையை நிர்ணயம் செய்கிறது
..அர்த்த நாரீஸ்வரர் என்பது இட வல சுவாச தத்துவமே..

"ஒருவர் வீட்டில் ஐந்து குழந்தைகள் ஐந்து குழந்தைகளின் லக்கினம் வேறு வேறு அப்பொழுது ஒவ்வொருவருக்கும் வேவ்வேறு பாவதிபதிகள் அப்படி என்றால் வேறு வேறு அப்பாவா? இல்லை அந்தந்த குழந்தைகளிடம் தந்தையின் அணுகுமுறை வேவ்வேறாக இருக்கும்.. "  -இது எனது FB நண்பர் குமாரசுவாமி அவர்களின் கருத்து..இது எனது ஆராய்ச்சிக்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது..

ஜாதக ஆராய்ச்சி-ராகுவும் யோகமும்


கேள்வி:இந்த ஜாதகருக்கு 07-03-2014 அன்று ஒரு நிகழ்வு நடந்தது..அது என்ன? Date of Birth:11-Nov-1982 12-05 am Madurai??

பதில்: ஜாதகர் அன்று அப்பா ஆனார்....
என்ன குழந்தை?
பெண்..


இந்த ஜாதகத்தை ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்வோம்...
ஜாதகருக்கு தற்சமயம் ராகு திசை சனி புத்தி நடக்கிறது.....
தசாநாதன் ராகு 11 இம் பாவ தொடர்பு பெற்று உள்ளார்...புத்திநாதன் சனி தான் நின்ற நச்சத்திர சார பலனை செய்யும்..
5,10 க்கு உரிய செவ்வாயின் சாரம் பெற்று பலன் நடத்துகிறார்..எனவே இந்த கால கட்டத்தில் ஜாதகருக்கு குழந்தை பிறந்தது.. செவ்வாய் சுக்கிரன் சாரம் பெற்றது பெண் குழந்தை பிறந்தது..செவ்வாய் 4,5,10,11 
பாவதொடர்பு...
5 இம் பாவத்தை இயக்கும் உப நட்சத்திர அதிபதியாக ராகுவும்,9 பாவ உப நட்சத்திர அதிபதியாக செவ்வாய் வருகிறார்கள் என்பதும் கவனிக்க தக்கது.

ராகு 11இம் பாவத்தில் இருந்து சுய சாரம் பெற்றது..ராகு திசை முதல் ஜாதகருக்கு யோக பலன் நடந்து வருகிறது.சனி புத்தியில் திருமணம்,வீடு,குழந்தை பிறப்பு போன்ற பலன்கள் நடந்து வருகிறது..

ஜாதகர் ஆண்குழந்தை எதிர்பார்த்தார்..பெண் என்பதால் கொஞ்சம் ஏமாற்றம்....சனி 8 இம் பாவ தொடர்பு சில ஆழ்மன ஏமாற்றங்களையும் காட்டுகிறது..
சனி 3,5,7,8,10 பாவ தொடர்பு பெற்று உள்ளது.

மேலும் குரு அந்திரம்,சுக்கிரன் சூட்சமம் காலத்தில் இந்த பலன் நடந்து உள்ளது...குரு,சுக்கிரன் 9 பாவ தொடர்பு பெற்று உள்ளனர்...
பிறந்த பெண் குழந்தையின் ஜாதகத்தில் தந்தையை குறிக்க கூடிய 4 ம் பாவக ஆரம்ப முனை பாகை கடகம் 23 degree இல் விழுந்து உள்ளது...
ஜாதகரின் லக்ன ஆரம்ப முனை கடகம் 23 degree என்பதும் குறிப்பிடதக்கது..




நண்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..

Monday, March 10, 2014

பூர்விகத்தை விட்டு செல்வதால் என்ன லாபம்?!


ஒருவர் ஜாதகத்தில் 5,9 பாவம் என்கின்ற பூர்வ புண்ணியம் ,பாக்கியஸ்தானம் கெட்டு இருப்பின் அவர் பிறந்த இடத்தை விட்டு தொலைவில் செல்வது நல்லது.. பிறந்த இடத்தை விட்டு தொலைவில் சென்றால் அட்சாம்சாம்,தீர்க்காம்சம் மாறும்....

அப்படி மாறினால் என்ன நடக்கும்???

ஒருவனுக்கு 6 இல் இருக்கும் கிரகம் அட்சாம்சாம்,தீர்க்காம்சம் மாறினால் 7 இல் கூட வரல்லாம் 5 இல் கூட வரல்லாம்.....வெளிநாடு சென்றால் 10 இல் கூட வரல்லாம்....
கோச்சாரா பலன் ,திசா புத்தி பலனில் மாறுபாடு வரும்....எனவே கெடுதல் நடப்பது தடுக்கபடுகிறது.....கிரகத்தை மாற்ற முடியாது...எனவே நாம் மாறிக்கொள்ள வேண்டியது தான் நல்லது...

பூர்வீக இஸ்தானம் நன்றாக இருப்பவர்கள் அதை விட்டு விட்டு வெகு தொலைவு சென்றால் பூர்விக நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போகும்.

Thursday, February 6, 2014

எனக்கு ஏன் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கலை?



நாம் நம்மை பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள்ளலாம்..ஆனால் உலகம் நம்மை பற்றி என்ன நினைக்கிறது ..உண்மையில் நம் உண்மை நிலை என்ன என்பதை நம் ஜாதகம் சொல்லி விடும்


நாங்களும் பையனுக்கு அன்சு ஆறு வருஷமா கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறோம் என்பவரா நீங்கள்...அப்போ இந்த பதிவ படிங்க ..தெளிவு பெருங்க...


ஜாதகத்தில் லக்கனம் நன்றாக இருந்தால் தான் பையன் நல்லவன் தெளிவான சிந்தனை கொண்டவன் போன்ற கருத்துக்கள் உங்களை சுற்றி இருப்பவரிடம் இருக்கும்.

இரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் தான் பையன் (or பொண்ணு) பாக்குறதுக்கு லட்சனமாக இருக்கிறான்(ள்) என்ற கருத்து மக்களிடம் இருக்கும்.அந்த பையனோட குடும்பம் நல்ல குடும்பம் என்ற பெயர் ஊர் மத்தியில் இருக்கும்.

மூன்றாம் பாவம் நன்றாக இருந்தால்தான் பையன் வல்லவன் என்ற பெயர் இருக்கும்.

நான்காம் பாவம் நன்றாக இருந்தால்தான் "பையன் கார் கூட வெச்சு இருக்கான்.சொந்த வீடு இருக்கு" என்பன போன்ற பேச்சுகள் உலா வரும்.பையனோட அம்மா ரொம்ப நல்லவா (பொண்ணுக்கு மாமியார் :) )என்ற பேர் இருக்கும்.

ஐந்தாம் பாவம் நன்றாக இருந்தால் பையன் யோக்கியன் (ஒழுக்கமான பையன் ) என்ற இமேஜ் இருக்கும்.

ஆறாம் பாவம் நன்றாக இருந்தால் தான் கடன்/நோய்/வழக்கு இல்லாமல் இருக்கும்.அதெல்லாம் இருந்தா உண்மை தெரின்சா எந்த பொண்ணு தான் கல்யாணம் செய்துக்க முன் வருவா??கல்யாணம் முடின்சாலும் பிரச்சினை தானே?

ஏழாம் பாவம் நன்றாக இருந்தால் தான் நண்பர்கள்,சமுதாய தொடர்பு நன்றாக இருக்கும்.

எட்டாம் பாவம் நன்றாக இருந்தால் தான் ஆயுள் பலம் நன்றாக இருக்கும்.[[ஏழு எட்டு பாவம் நன்றாக இருந்தால் தான் தேனிலவு நன்றாக இருக்கும்]].

ஒன்பதாம் பாவம் நன்றாக இருந்தால் தான் பையனுக்கு அப்பன் பாட்டன் சொத்து எல்லாம் இருக்குபா என்ற பேச்சு இருக்கும்.

பத்தாம் பாவம் நன்றாக இருந்தால் தான் "அவனுக்கு என்னப்பா கை (பை) நெறைய சம்பாதிக்கறான்..." என்பார்கள்...பையன் என்ன வேலை பாக்கிறான் என்பது தானே பெண் வீட்டார் முதல் கேள்வி...கல்யாணத்துக்கு முதலில் பார்க்க வேண்டிய பாவமாக பத்தாம் பாவம் ஆகி விட்டது.. :)

பதினோராம் பாவம் நன்றாக இருந்தால் தான் அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டுவாள்.

பணிரெண்டாம் பாவம் நன்றாக இருந்தால் தான் கல்யாணத்துக்கு அப்புறம் கூட நிம்மதியா தூங்க முடியும்..

இல்லைனா எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் வேண்டும் என்ற பாட்டு தான்....

கல்யாண சந்தையில் மேற்கண்டவற்றின் தகுதிக்கு ஏற்ப (மார்க்100 க்கு எவ்வளவு :) ) என்பதுக்கு ஏற்ப மணமகன்/மணமகள் கிடைக்கும்.

இதற்கு அப்புறம் தான் பத்து பொருத்தம் எல்லாம் workout ஆகும்..!!!!

விநாயகருக்கு இரண்டு மனைவி ஏன்?



தென் இந்தியாவில் விநாயகர் பிரமச்சாரி...வட இந்தியாவில் விநாயகருக்கு இரண்டு மனைவிகள்...ஒருவேளை இந்த இரண்டு மனைவிகள் தொல்லை தாங்காமல் வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவுக்கு ஓடி வந்து விட்டாரா :) 


உண்மை அது அல்ல..உண்மையில் இரண்டு மனைவிகள் என்பது நமது உடம்பில் சூட்சமாக இயங்குகிற வலது இடது நாடிகள்...வலது இடது சுவாசங்கள்....நமது மூச்சு காற்றை கவனித்து பார்த்தால் அது சில நேரங்களில் மூக்கின் வலதுபுறமும்,சில நேரங்களில் மூக்கின் இடதுபுற துளை வழியாகவும் இடைவெளி இல்லாமல் வந்து சென்று கொண்டே இருக்கும்..

இதன் அடிப்படையில் நமது இடது வலது மூளை செயல் பட்டு கொண்டே நம் எண்ணங்களை தூண்டி கொண்டே இருக்கும். இவர்கள் தான் இரு பொண்டாட்டிகள்..இவர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க (விடுதலை) பெற வேண்டும் எனில் வலது இடதுக்கு நடுநிலையான சூஷ்மனா நாடியை விழிக்க செய்ய வேண்டும்..

அப்போது மட்டுமே இடைவிடாத மன இயக்கம் என்ற பொண்டாட்டி தொல்லை-இல் இருந்து விடுதலை பெற முடியும்...இதன் சூட்சம குறியீடு தான் விநாயகர்,முருகர் போன்றோருக்கு இரண்டு மனைவிகள் எனபது..

ஜோதிடத்தின் எல்லை!!!

பிரம்மத்தை தவிர எல்லாவற்றிக்கும் ஒரு எல்லை உண்டு.....மருத்துவம்,அறிவியல் போல ஜோதிடத்துக்கும் ஒரு எல்லை உண்டு......எல்லாவற்றுக்கும் ஜோதிடத்தில் பலன் சொல்ல முயன்றால் முடிவு ஏமாற்றம் அளிக்கும்....

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் வேறு ஒரு கோளையோ, நட்சத்திரத்தையோ, நட்சத்திர மண்டலத்தையோ மையமாக வைத்தே சுற்றுகின்றன. காரணம் அவைகளுக்கிடையேயுள்ள ஈர்ப்பு விசை (Gravitation). இந்த ஈர்ப்பு விசை அவற்றை, ஒன்றுடன் ஒன்றாக இணைத்து இயங்க வைத்துக் கொண்டிருக்கும்.

சூரியன் போன்ற எண்ணிலடங்கா நட்சத்திரங்களைக் கொண்டது இந்தப் பால் வெளி மண்டலம் கேலக்ஸி (Galaxy).

நமது பால்வெளி மண்டலத்தில்(Galaxy) உள்ள நட்சத்திரத்தின் எண்ணிக்கையே இன்னும் விஞ்ஞானக் கணக்கீட்டால்கூட கண்டறியாத நிலையில் எத்தனை பால்வெளி மண்டலங்கள், அதில் உள்ள நட்சத்திரங்கள் எவ்வளவு என்பது பற்றி அறிவது தற்போதைய காலகட்டத்தில் உள்ள அறிவியல் வளர்ச்சியில் சிரமமான காரியம்.






மேலும், கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள்  மிதந்துகொண்டு இருக்கும் 
இருப்பிடம் பேரண்டம்(Universe).

பூமி மற்றும் இதர கிரகங்கள் சூரியனை சுற்றுகிறது... சூரிய மண்டலம்(குடும்பம்) ஆனது நம்முடைய Galaxy யை சுற்றி வருகிறது

ஒரு வீட்டின் கூரையில் மாட்டப் பட்டிருக்கும் மின்சார விசிறி (Fan) கிடையாகச்சுற்றுகிறது. நமது பால் வெளி மண்டலமும்(Galaxy ) அப்படித்தான் சுற்றுகிறது.ஆனால் நமது சூரியன், பால்வெளி மண்டலத்தில் இருந்து கொண்டே,மேசையில் இருக்கும் மின்விசிறி (Table Fan) போல, பால்வெளிமண்டலத்துக்குச் செங்குத்தாக சுற்றுகிறது.






https://www.youtube.com/watch?v=0jHsq36_NTU    


இந்த link இல் சென்று பார்த்தால் நன்கு புரியும்

நமது பூமிக்கு நடுவாக பூமத்திய ரேகை இருப்பது போல, பால்வெளி மண்டலத்துக்கும் நீளமான, ஒரு மத்திய ரேகை உண்டு. இதை Galactic Equator என்று சொல்வார்கள்.
நமது சூரியன் இப்படிப் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையை (Galactic Equator) சந்திக்க எடுக்கும் காலம்  26,000 வருடங்கள்.

ஏறக்குறைய 170 பில்லியன் பால்வெளி மண்டலங்கள்(Galaxy ) நம்முடைய (!!) Universe -ல் உள்ளன

(There are probably more than 170 billion galaxies in the observable universe -http://en.wikipedia.org/wiki/Galaxy)

இது போல பல பேரண்டங்கள்(universe) உள்ளன. :)
மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்......

Reference:

Wednesday, February 5, 2014

ஜோதிடம் உண்மையா?!

எங்கேயோ சுற்றி கொண்டும் இருக்கும் கிரகங்கள் மனிதன் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா?? 
ஜோதிடம் எல்லாம் பொய் என்று சொல்லுபவர்கள் இருக்ககத்தான் செய்கிறார்கள்...
கிழ் கண்ட படத்தை பார்த்தால் உண்மை என்ன என்று புரியும்....
படத்துக்கு விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்...







கிரகங்கள்,நட்சத்திர கூட்டங்கள் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டு தான் உள்ளன....ஜோதிடம் பொய் அல்ல....ஜோதிடம் சொல்லும் சிலர் தான் சில நேரங்களில் தவறாக கணித்து விடுகின்றனர்..

Friday, January 17, 2014

கிரக உச்சம், நீசம் என்றால் என்ன?

சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார்...சூரியனின் அதிக பட்ச கதிர்கள் பூமியை வந்து அடிக்கிறது...பூமி சூரியனின் சுற்று பாதையில் அருகில் செல்கிறது....ஐப்பசி மாதம் குளிர் காலம்...பூமி சூரியனிடம் இருந்து குறைந்த பட்ச கதிர்களை பெறுகிறது.....நீசம் என்று சொல்லாம்....

பூமி இன் சுற்று பாதையை,சாய்வு போன்ற அளவுகளை பொறுத்து கிரகங்களிடம் இருந்து அதிக கதிர் ,அல்லது குறைந்த கதிர்களை பெறுவதை உச்சம் நீசம் என்கிறோம்...
அப்படியானால் சூரியன் இரவில் தெரிவதில்லை....கதிர்கள் வந்து அடைவதில்லை எனினும் அடித்த வெய்யிலின் ஆகர்ஷ்ணா சக்தி பூமியில் இருக்கும்..

இதே போல் சந்திரனை ஆய்வுக்கு எடுத்து கொண்டால் இது பூமியின் துணைக்கோள் மற்றும் அளவில் 2 1/2 நாள் தான் ஒரு ராசி மண்டலத்தின் கீழ் வருகிறது..அதே சமயம் பகல் இரவு ,திதி போன்றவற்றின் அடிப்படையில் சந்திரனின் கதிர் வீச்சின் அளவு மாறுகிறது...ஆகார்ஷ்ணா சக்தி மாறுகிறது....
இது போல் மற்ற கிரகங்கள் கதிர்களும் பூமியை வந்து குறைந்த அளவோ அல்லது மிகுந்த அளவோ ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் தாக்குகின்றன.

கிரகங்கள் உள்வட்ட கிரகங்களா,வெளி வட்ட கிரகங்களா என்பதை பொருத்தும் கதிர் வீச்சின் அளவு மாறுகிறது....இதற்கு ஏற்ப கிரகங்களின் உச்ச நீச வீடுகளை நம் ரிஷிகள் தீர்மானித்து உள்ளனர்...
ஒரு கிரகம் உச்சம் பெற்றால் நன்மை செய்யும்,நீசம் பெற்றால் தீமை செய்யும் என்பது தவறான கருத்து..

லக்னம் ஓர் பார்வை

கரு உண்டான பின் அது படி படியாக வளர தொடங்குகிறது..அந்த உண்டான கருவில் அந்த கருவின் உடல் மன அமைப்புக்கு உட்பட்ட படி ஏதாவது ஒரு உயிர் உள்ளே நுழையும்.எந்த உயிர் என்பதை தீர்மானிப்பது அந்த உயிரின் முன் பல ஜென்ம பாவ புண்ணியங்களே...அவ்வாறு ஒரு உயிர் ஒரு கருவில் (பிண்டத்தில்) உட்புகும் போது....அது தனக்கு ஏற்றவாறு ஏதாவது சக்கரத்தின் வழியாக உடம்பில் புகும்.(மூலதாரம்,அனாகதம்,ஆக்னா)....பெரும்பாலும் அந்த ஆத்மா தலை வழியாக ஆக்னா வில் நுழைந்து விடும். இவ்வாறு நுழையும் நேர உதய ராசியும் குழந்தை தலை வெளிவரும்(பிறக்கும் போது) உதய நேர ராசியும் ஒன்றாக இருக்கும்.நம்மால் கருவில் ஆத்மா புகும் நேரத்தை காண முடியாது.அது 5,6,7,8 வது என எந்த மாதம் வேண்டுமானால் நடக்கலாம்.
இங்கே ஆத்மா என்பதை ஜீவ ஆத்மா என்று கொள்ள வேண்டும்.....

உடல் இறந்த பின் அந்த உயிரில் (அணுவில்) பதிவான ஆழ்ந்த வாசனைகளை எடுத்து கொண்டு ஜீவ ஆத்மா வெளியேருகிறது....மீண்டும் பிறக்க சரியான கால கட்டம் இறைவனால் அமைக்கப்படும் போது....அந்த வாசனைகள்(பாவ,புண்ணிய,காம பதிவுகள்) உடன் ,அந்த ஜீவ ஆத்மா கருவுக்குள் நுழைகிறது..பிறந்தவுடன் சுவாசிக்க சுவாசிக்க அந்த வாசனைகள் மீண்டும் உயிர் பெறுகின்றன...
லக்னம் என்பது ஒரு ஆத்மா உடலில் புகும் நேரத்தில் உதயமாகும் ராசியை குறிக்கிறது எனலாம்.அதே ராசி தான் குழந்தை இந்த பூமியில் முதல் சுவாசத்தை சுவாசிக்கும் போதும் அமைகிறது எனலாம்.


பெரும்பாலும் குழந்தை பிறக்கும் போது உயிர் அந்த உடலோடு ஒட்டியும் ஒட்டாமல் தாமரை இலை தண்ணீர் போல இருக்கும்.அதன் சக்தி ஆக்னாவில் இருக்கும்.



கால போக்கில் அந்த உயிர் சக்தி படி படியாக கிழ் இறங்கி முலாதாரத்துக்கு வந்து விடுகிறது...கடைசியில் அந்த உடல் தான் நான் என நம்ப ஆரம்பித்து விடுகிறது.அதன் பின் கால போக்கில் நான் super star, power star என நம்ப ஆரம்பித்து விடுகிறது.. :)



Wednesday, January 15, 2014

ராகு -ஓர் மெய் ஞான விளக்கம்

ராகு வை பற்றி தெரிந்து கொள்ளும் முன் கேதுவை  பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ராகு ராசி மண்டலத்தில் (அண்டத்தில)கீழ் வரும் நட்சத்திர கூட்டங்களை யும்,பிண்டத்தில் கீழ்வரும் சக்கரங்களையும் ஆளுமை செய்கிறார்.

திருவாதிரை = விசுத்தி சக்கரம்
சுவாதி =சுவாதிஷ்டினம் சக்கரம்
சதயம்=மணிப்புரகம் சக்கரம்

கேது சூரியனின் நிழல் என்றால் ராகு சந்திரனின் நிழல்.
காளி=ராகு
சிவா என்ற வெறுமை-ல் இருந்து காளி=ராகு தோன்றுகிறது.

சிவனின் சுவாதிஷ்டினம்,மணிப்புரகம் என்கிற சக்கரத்தில் இருந்து ராகு=காளி தோன்றுகிறது. இதை தான் கிழ் கண்ட படம் சொல்ல முயற்சி செய்கிறது.[படத்தில் காளியின் கால் சிவனின் மணிப்புரகம் சக்கரத்துக்கு மேல் இருக்கிறது.]



சுவாதிஸ்டினா சக்கரம் காரணமாக தான் ஆண் தன் உயிர் சக்தி கொண்டு குழந்தை பெற்று கொள்கிறான்.
இதுவே பெண்களுக்கு சுவாதிஸ்டினா சக்கரம் ஸ்துல உடலில் கருப்பையை ஆளுமை செய்கிறது.




மணிப்புரக சக்கரம் மனிதன் மனத்தை ஆளுமை செய்கிறது....மணிப்பூரக ராகு-சந்திரன் உடன் இணைந்து கெட்டால் மனம்பைத்தியம் பிடிக்கிறது.
ராகு இந்த சக்கரங்களை ஆளுவதால் தான் ராகு ஜாதகத்தில் கெடும் போது காமம் போதை என ஜாதகன் அடிமை ஆகிறான்.ராகு நல்ல நிலையில் இருக்கும் போது அதிக உயிர் சக்தி பெறுகிறான்.திரைப்படம்,காவியம் ஓவியம்,இலக்கியம் போன்றவற்றில் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறான்.

விசுத்தி சக்கரம் நன்றாக செயல் படும் போது சங்கீதம் ,இசை போன்ற வற்றில் ஈடுபடுகிறான்.கெடும் போது விஷம பேச்சில் ஈடுபடுகிறான்.
இந்த சக்கரங்கள் நமது சூட்சம உடலை ஆளுமை செய்கின்றன... ஸ்துல உடலில் நோய் வருகிறது என்றால் அதன் அறிகுறி சூட்சம உடலி தான் முதலில் தெரியும்....இதை வைத்து தான் நாடி மூலம் நோய் அறிந்து சொன்னார்கள் நமது சித்த யோகிகள்..




உண்மை இப்படி இருக்க ...ராகு கெட்டால் பாம்புக்கு பால் முட்டை வை என்று சொல்லுகிறார்கள் சில ஜோதிடர்கள் :) பாம்பு பால் முட்டை சாப்பிடாது என்பது வேறு விசயம்..

கேது -ஓர் மெய் ஞான விளக்கம்


ராகு கேது வை பற்றி இன்று எண்ணில் அடங்கா குழப்பங்கள் ஜோதிடர் மற்றும் மக்களிடையே நிலவுகிறது.
ராகு கேதுவை பற்றிய புராண கதைகள் நமக்கு தெரியும்....இன்னும் அதையே நம்பி கொண்டு இருக்கலாமா??
ஜோதிடத்தில் கேது ராகு திசையை வைத்து பயம் காட்டும் ஜோதிடர் பலர் உண்டு...
உண்மையில் கேது யார்?கேது வின் அதி தேவதை விநாயகர் என்று சொல்ல படுவதன் காரணம் என்ன??

கேது =ஓம்(ஆ உ ம)=விநாயகர்

ஆ =மூலம் நட்சதிரம்(தனுஷ்) =முலாதாரம் சக்கரம்
உ =மகம் நட்சதிரம்(சிம்மம்) =அனாகதம் சக்கரம்
ம =அஸ்வினி நட்சதிரம்(மேஷம்) =அக்ஞை சக்கரம்

அதியான சிவத்தில் இருந்து ஓம் என்ற நாதம் தோன்றியது.. அந்த ஓம் இல் இருந்து தான் பல அணுக்கள் ,பெரும் அணுக்கள்( நட்சத்திரகள்,கோள்கள்,) தோன்றின..அதனால் தான் சிவத்தை வழிபடும் முன் விநாயகரை முதலில் வணங்கி செல் என்று சொல்ல பட்டது.. அதாவது ஓம் என்ற மந்திரம் ஜெபிக்க ஜெபிக்க ஆதி சிவா என்ற பேருண்மையை உணரமுடியும் என்பதே இதன் பின்னால் உள்ள ரகசியம்.



[[மூலாதார சக்தி மட்டுமே மிகுந்த மனிதன் காட்டு மிராண்டி யாகவும் ..பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் அவன் யோகி ஆவதை மேல் கண்ட படம் விளக்குகிறது.]]

மனிதனுக்கு மட்டும் அல்ல ..மற்ற உயிர்களிலும் இந்த குண்டலினி சக்தி உண்டு...அந்த சக்தியானது அந்த உயிரின் பரிணாம வளர்ச்சிக்கு தகுந்தபடி இருக்கும்.
ஜோதிடத்தில் மிக வலுவான கிரகம் கேதுவே...ஏன் எனில் முதன் முதலில் ஒரு அணு சிவாவில் இருந்து உண்டாகும் போது அதன் சக்தி தான் கட்டமைக்க படுகிறது.அந்த சக்தியை கட்டமைப்பது கேது-ராகு என்ற குண்டலினி சக்தியே.
மூலாதார,அனாகத,ஆக்ஞை சக்கரத்தை ஆள்பவர் கேதுவே.
சூரிய குடும்பத்தில் கேது என்பவர் சூரியனின் நிழல் என்று சொல்லலாம்...


நமது ராசி மண்டலத்தில் அஸ்வினி தான் முதல் நட்சத்திர கூட்டம்...அதே சமயம் அஸ்வினி நட்சத்திரத்தில் தான் சூரியன் உச்சம் பெறுகிறார்...
மகம் நட்சத்திரதில் ஆட்சி பெறுகிறார்...மூலம் நட்சத்திரதில் நட்பு
பெறுகிறார்.



சூரியன் என்கிற ஆத்மாவின் இன்னொரு புறமே குண்டலினி சக்தி என்கிற கேது ஆவார்.....கேது நல்ல நிலையில் உள்ள ஜாதகர் ஆத்ம ஞானம் பெரும் பாக்கியத்தை பெறுகிறார்..



கேது வலு பெற்றால் ஆத்ம ஞானம் சித்திக்கும்.உண்மையான யோகிகள் அனைவரின் ஜாதகத்தில் கேது வலு பெற்று இருக்கும்.
ஜோதிட கலையை உலகிற்கு அளித்தவர்கள் கேது வின் ஆதிக்கம் பெற்ற ரிஷிகள் தான்...
ஆனால் அந்த கலை இன்று பலரிடம் மாட்டி கொண்டு படாத பாடு படுகிறது.. :)
வெறுமனே புதன் ஆதிக்கம் இருந்தால் ஜோதிட கணிதம் நன்கு செய்ய முடியும்..ஜோதிடர் ஆகலாம்.ஆனால் கேது நல்ல முறையில் இருப்பின் மட்டுமே ஜோதிடருக்கு இறை அருள் துணை நிற்கும்..

குண்டலினி சக்தியை குறிக்கும் குறியீடுயாக பாம்பை சொல்லி வைத்து சென்றனர் நம் யோகிகள்..இப்போது நீங்களே சொல்லுங்கள் ராசி மண்டலத்தில் ராகு கேது ஏன் பின்புறமாக சுற்றுகிறார்கள் என்று??.. அடுத்த பதிவில் ராகுவை பார்ப்போம்..

Friday, January 10, 2014

குரு வணக்கம்



                             குரு ப்ரம்மா குரு விஷ்ணு
                             குரு தேவோ மஹேஸ்வரஹ
                             குரு சாட்சாத் பரப்ரம்மா
                             தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா....

விநாயகர் துதி


 விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
 விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
    கண்ணில் பணிமின் கனிந்து