Friday, April 24, 2015

மகா பெரியவா -சில கேள்விகள்


//////////ஒரு சமயம், பெரியவர் கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தார். அங்குள்ள வீட்டில், சிறுவனும், அவனது பாட்டி யும் இருந்தனர். பெரியவரை கண்டதும், ஓடி வந்து நமஸ்கரித்தனர். பெரியவர் மூதாட்டியிடம், நேற்று இரவு உன் பேரன், நம் வீட்டுக்கு பெரியவர் வருவாரா என்று கேட்டான் இல்லையா! நீ அதற்கு என்ன சொன்னாய்? என்றார். பெரியவா! உங்களுக்கு பாதபூஜை செய்யவோ, பிøக்ஷ செய்யவோ (தானம் தருதல்) எங்களிடம் வசதியில்லை, அதனால், நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரமாட்டீர்கள் என்று சொன்னேன், என்றார் மூதாட்டி. பெரியவர் சிரித்தார். பார்த்தாயா! இப்போது நான் வந்துவிட்டேன்! என்றவர், பையனை அழைத்து, என்னை தரிசிக்க நீ எதுவும் செய்ய வேண்டாம். உன் வீட்டுக்கு வருவேனா என்று சந்தேகப் பட்டாய்! இப்போ, நான் உன் வீட்டுக்குள்ளேயே வரப் போறேன். நீ அனுமதிப்பாயா? என்றவர், அவனது பதிலுக்கு காத்திராமல் வீட்டுக்குள் வந்து சிறுவனை ஆசிர்வதித்தார்.

முக்காலமும் உணர்ந்த ஞானியாக காஞ்சிப் பெரியவர் திகழ்ந்தார்//////////

//////////அவரது ஞானத்தைப் பிரதிபலிக்கும், ஒரு சம்பவத்தை கேளுங்கள். பெரியவர், தன் சீடர்கள் ஆந்திர மாநிலத்திற்கு புனித யாத்திரை கிளம்பினார். காஞ்சி புரத்திலிருந்து கிளம்பி வேலூர் வழியாக சித்தூர் செல்வதாக திட்டம். குதிரைகளும், ஒரு யானையும் அவர்களுடன் சென்றன. வேலூரை அடுத்து உள்ள சேம்பாக்கம் கிராமத்தை அடைந்த போது, யானை நகர மறுத்தது. அதைப் பிடித்து தள்ளினால், பயங்கரமாகபிளிறியது. இந்த விபரம் மகா பெரியவருக்கு தெரிவிக்கப் பட்டது. அவர் சிறிதும் சலனமின்றி ஓரிடத்தைச் சுட்டிக் காட்டி, அந்த இடத்தைச் சுத்தப்படுத்துங்கள், என்று சீடர்களுக்கு உத்தரவு போட்டார். சீடர்களும் அவ்விடத்தைச் சுத்தப்படுத்தினர். புதருக்குள் ஒரு ஸ்ரீசக்ரம் (சுவாமியின் சக்தியை உள்ளடக்கிய யந்திரம்) இருந்தது. அதை எடுத்து சுத்தம் செய்து பிரார்த்தித்தார். அவ்வூரில் உள்ள விநாயகர், மேற்கூரை இல்லாமல் இருப்பவர். அவரது பார்வையும் வானத்தைப் பார்க்கும் நிலையில், மேல்நோக்கி இருக்கும். அந்த விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கப்பட்டது. பூஜை முடிந்ததும், தகராறு செய்த யானை எழுந்து நின்று பயணத்தைத் தொடர்ந்தது. மறைந்து கிடக்கும் ஸ்ரீசக்ரத்தை வெளிக்கொண்டு வரவும், விக்னேஸ்வர பூஜை முடித்து, எவ்வித விக்னமும் (தடையும்) இல்லாமல், பயணம் நடந்து முடியவுமே இந்த அதிசயம் நிகழ்ந்ததை ஊராரும் கண்டனர்////////////

இது மட்டும் அல்ல ,இது போல பல கதைகள் உண்டு ..... காது கொடுத்து கேட்டால் அசால்டாக அளந்து விடுவார்கள்... :D

இப்படி பட்ட முக்காலமும் உணர்ந்த பெரியவா ஏன் தன் மடத்துக்கு களங்கம் விளைவிக்க கூடிய ஜெயெந்திரர் அவரை தலைவராக நியமித்தார் ???

சங்கராமன் கொலை வழக்கு உலகம் அறிந்த ஒன்று ..அது மட்டும் அல்லாமல் அனுராதா ரமணன் என்ற எழுத்தாளர் கொடுத்த பாலியல் தொடர்பான புகார் பெரும்பாலானவர் அறிந்த ஒன்று ...

சரி ஜெயெந்திரர் ஒரு ஆன்மிகவாதி எனில் தனக்கு வரும் ஆபத்துக்கு பரிகாரம் எதுவும் செய்து கொள்ள வில்லையா ??

சரி சங்கர மடத்துக்கு வர இருந்த அவ பெயரை மகா பெரியவா முக்காலம் உணராமல் விட்டு விட்டாரா ??

சரி மகா பெரியவா போல ஜெயந்திரர் முக்காலம் உணர்ந்து உரைத்த சம்பவம் ஒன்று உண்டா .....?? இப்போது பெருமையாக சொல்லிக்கொள்ள ஒரு விசயமும் இல்லை .... எனவே முன்பு நடந்த சில சாதாரண சம்பவங்களை ஒரு கும்பல் மிகை படுத்தி சொல்லி கொண்டு உள்ளார்கள் ......

ஒரு மடத்துக்கு ஒரு தலைவர் இருக்க இன்னொரு தலைவர் ஆக விஜெயெந்திரர் நியமிக்க பட்ட காரணம் தெரியுமா ?? ஹி ஹி

சந்திர சேகர சரஸ்வதி அவர்களை பெரியவர் ,எளிமையானவர் என்ற விதத்தில் மதிக்கிறேன் ......அனால் அவர் முக்காலம் உணர்ந்தவர் என்று சொல்லவ து மிகை படுத்த பட்ட ஒன்று .....


அப்படி அவர் முக்காலம் உணர்ந்தவர் எனில் என் நியாயமான கேள்விக்கு நியாயமான முறையில் மகா பெரியவா ரசிகர்கள் பதில் தர வேண்டுகிறேன் .....

இது எதோ என் தனிப்பட்ட கேள்வி அல்ல ...நிறைய பேருக்கு உள்ள நியாமான சந்தேகம் ......

ஒரு உண்மை என்ன எனில் நம்மை விட நாய்க்கு கேக்கும் திறன் 100 மடங்கு அதிகம் .....

பறவைகள் ,பாம்புகளுக்கு நில நடுக்கம் வருவதை முன் கூட்டியே உணரும் ஆற்றல் உண்டு ..... ஒரு இடத்தில நில நடுக்கம் வருகிறது எனில் அவைகள் சில மணி நேரத்துக்கு முன்னே அந்த இடத்தை விட்டு விலகி சென்று விடும் ....

மனிதன் அந்த ஆற்றல் குறைவாக உள்ள காரணம் இயற்கையோடு இயற்கையாக வாழாமல் இப்படி செயற்கையாய் கதை அளந்து கொண்டும் ...யாரோ ஒருவர் மகான் என்றும் நினைத்து கொண்டு உள்ள அறியாமையே ....

என்னுடைய கேள்விகளுக்கு சில ஆதார பதிவுகள் கீழே....

http://suunapaana.blogspot.in/2009/08/blog-post.html                                                                                                                   http://www.vinavu.com/2011/08/26/jeyandran-scam/

Friday, April 3, 2015

மீண்டும் ராகு-கேது


                  

1, 5, 9 தின் ஆரம்ப முனையை (அஸ்வினி மகம் மூலம்)கேதுவே ஆள்கிறார் .....ராகு 3, 7 ,11 பாவத்தை ஆள்கிறார் (திருவாதிரை ,சுவாதி சதயம் )..3 7 11 .பாவம் என்பது தன்னம்பிக்கை,வீரியம் ,வெற்றி எனபது அனைவரும் அறிந்ததே .......புற வெற்றி கர்மாவை சேர்க்கவே செய்கிறது ........ ராகு முடிந்த வரை ஆன்மிகத்தில் நுழைவதை தாமத படுத்தவே செய்யும்.....ஆன்மிகத்துக்கு கேதுவும் ,புற வாழ்க்கை வெற்றிக்கு ராகுவும் ஆதிக்கம் செய்கிறார்கள் ......

மேலும் சுக்கிரன் கேதுவின் நட்சதிரத்தை அடுத்து வருகிறது ....கேதுவே மீண்டும் ஆத்மா சுக்கிலதுக்குள் (சுக்கிரன்) நுழைய வேண்டிய அவசியம் உள்ளதா ,இல்லையா என்பதை காட்டுகிறது .... சூரியனின் நிழல் ராகு ...ஆத்மாவை மறைக்கும் மாயைகள் எல்லாம் ராகுவே....
சந்திரனின் நிழல் கேது ..மனதை மறைப்பது .... அதாவது மனதை அழித்து மனமற்ற நிலையை தருவது கேது ...
எனவே ஆன்மிகத்தில்/வாழ்வில் மாயையை ஏற்படுத்துவது ராகு , தெளிவை ஏற்படுத்துவது கேது....

******************************************************************************************

இப்பிரபஞ்சம் பேராற்றுலுடனும் பேரறிவுடனும் இயங்குகிறது...ஆற்றல் (ராகு ) அறிவு (கேது ) நமக்கு இப்பிரபஞ்சத்தில் இருந்து ராகு-கேது பெற்று தருகிரார்கள் ... ,

ஆற்றல் (ராகு ) அதிகம் இருப்பின் அகங்காரம் வருவது மனித (மன ) இயல்பு... எனவே ராகுவின் எதிர் முனை யான கேது (அறிவு ) அதை சமன் படுத்த வேண்டும் ..எனவே தான் ராகு கேது நேர் எதிர் செயல் பட்டு இப்பிரபஞ்சதில் சமநிலையை ஏற்படுத்துகிறது ....

அகோரிகள்,நாகாக்கள், பைராகிகள்,சக்தி உபாசர்கள் ராகுவின் ஆதிகத்திலும் , ஞானிகள் கேதுவின் ஆதிகத்திலும் ,சித்தர்கள் ,யோகிகள் ராகு -கேது இரண்டின் ஆதிக்கம் நிறைந்தவர்கள் என்பது என் புரிதல்.....

**********************************************************************************************
இது ஒரு ஆராய்ச்சி கட்டுரை மட்டுமே .. உங்கள் ஒத்த/ மாற்று கருத்துகளை பகிருங்கள் ஆத்ம நண்பர்களே ...

Thursday, March 12, 2015

ராகு கேதுவும்-சூட்சம காரண சரீரமும்




கால சக்கரத்தில் 8ம் பாவம் ஸ்தூல உடல் உயிரை குறிக்கிறது .7ம் பாவம் உடல் உயிர் பிரிவதை காட்டுகிறது .9ம் பாவம் உடலில் இருந்து உயிர் பிரிந்த பின் சூட்சம சரீரத்தை குறிப்பிடுகிறது.எனவே தான் 9ம் பாவத்தை முன்னோர் சூட்சம சரீர(பித்ரு) தோஷம் உள்ளதா என ஆராயப்படுகிறது.

ராகுவே மரண காரகன் என அழைக்க படுகிறார்.சூட்சம சரீரதுக்கு காரண மாகிறார் .சிலர் வாழும் காலத்தில் சூட்சம சரீரத்தை ஸ்தூலசரீரத்தை விட்டு பிரித்து பிரபஞ்சம் எங்கும் சுற்றி வரும் ஆற்றல் பெற்று இருப்பர்..இவர்கள் ராகு வின் ஆதிக்கம் மிகுந்து காணபடுபவர்கள் ஆக இருப்பர் .

சூட்சம சரிர வலுவை பொறுத்தே உடல் வலு இருக்கும்..எனவே தான் கால சக்கரத்தில் 3 7 11 (திருவாதிரை ,சுவாதி ,சதயம்-போக சக்தி ,போகத்தை அனுபவித்தல் ,திருப்தி )என்ற காம திரிகோணத்தை ராகு ஆள்கிறார்.

ஒரு குறிப்பிட்ட நோய் வருகிறது எனில் அதன் பாதிப்பு சூட்சம உடலில் ஏற்கனவே தெரிய ஆரம்பித்து விடும் ..சூட்சம சரீரதுக்கு எங்கே இருந்து ஆற்றல் வருகிறது அல்லது எது காரணமாக உள்ளது எனில் அதுவே காரண சரீரம்,. இதுக்கு காரண கர்த்தா கேது ..


எண்ணங்கள் அற்ற தூக்கத்தில் அல்லது எண்ணங்கள் அற்ற விழிப்பு நிலையில் காரண சரீரம் பிரம்மத்தில் இருந்து ஆற்றலை சூட்சம சரீரம் வழி ஸ்தூலசரீரதுக்கு கொடுக்கிறது .

பிறவிக்கான காரணத்தை கேது குறிபிடுகிறார் எனவே தான் கால சக்கரத்தில் முதல் நட்சத்திரம் கேதுவின் அஸ்வினி .. மேலும் 1ம் பாவத்துக்கு விரய பாவமான 12ல் கேது இருப்பின் பிறவிக்கு இனி எந்தவொரு காரணமும் இல்லை மோட்சம் என்பதாகிறது ...எனவே தான் கால சக்கரத்தில் 1 5 9 (அஸ்வினி ,மகம் ,மூலம் -தற்போதைய பிறவி காரணம் ,வரும் பிறவி காரணம்,முன் பிறவி காரணம் )என்ற திரி கோணத்தை ஆள்கிறார்..

ராகு கேது நிழல் கிரகம் எனவும் ,அவர்கள் வலுவானவர்கள் என்று சொல்ல இதுவே காரணமாக இருக்க முடியும் ..

ராகு சனி என்ற கர்ம காரகனுடன் சேரும் போது காமத்தை (ஆசையை ) வரம்புக்கு மீறி அனுபவிப்பதும் ,மேலும் துர் மரணம் , அல்லது போதையில் கூட சிலர் சூட்சம உடலை கண்டு வருவது போன்றவை நடக்கும்..ராகு சனி சேரும் இடத்தை பொருத்து பலன் மாறுபடும் ...

கேது சனி யுடன் சேரும் போது காமத்தை (ஆசையை ) ,கர்மத்தை அனுபவித்து அழிக்கிறார்..
கேதுவின் போதை என்பது ஞானிகள்,யோகிகள் மோன நிலை என்ற தியான போதையில் இருப்பது போன்று ..
ராகுவின் போதை என்பது ஒரு திரைபட நடிகர் புகழ் ,பெண் போன்ற போதையில் தன்னை மறப்பது போன்று..இது பொது பலன் ..மற்ற கிரக சேர்க்கைக்கு ஏற்ப போதை யின் அளவு ,காரணம் மாறுபடும் ..


சித்தர்கள், யோகிகள் குரு+கேது+சனி சேர்க்கை எனில் ,போலி 
ஞானிகள், திரை பட நடிகர்கள்,   சுக்கிரன்+ராகு+சனி  என்று சொல்ல முடியும் ..
ராகு கேது அமிர்தம் உண்டவர்கள் ,அழிவில்லை என்று மறைமுகமாக கூற காரணம் சூட்சம ,காரண சரீரம்  சிவ நிலை என்னும் பிரம்மத்திடம் இருந்து அமிர்தம் ஆகிய ஆற்றலை பெரும் தகுதி கொண்டது என்பதலாயே இருக்க முடியும்..

Wednesday, March 4, 2015

அம் மனம்




மனம் அஉம் என்ற நாதத்துடன் சேரும் போது அம் மனம் ஆகிறது .... அம் மனம் மே ஞானம்.... மனதை அம் -மனம் ஆக்காமல் துணி இல்லாமல் சுற்று வதால் ஞானம் உண்டாகுமா ??

ஆண் மூலம் அரசாளும்...பெண் மூலம் நிர் மூலம்-ஏன்?





ஆண் மூலம் அரசாளும்...பெண் மூலம் நிர் மூலம்.... இதன் உண்மை பொருள் என்ன ?? பெண் கிரகம் ஆன சந்திரன்(சந்திர கலை ) கேது(அக்னி கலை)க்கு உரிய மூல நட்சத்திரத்தில் நிற்கும் போது மனதை அழித்து நிர் மூலம் ஆக்கும்... ,மேலும் இது குருவுக்கு உரிய தனுசு ஆதலால் மன மற்ற ஞான நிலையை தரும்.... ஞானிகளில் பலர் மூல நட்சத்திரத்தில் பிறந்து உள்ளது குறிப் பிடத்தக்கது ..... இதே போல ஆண் கிரகமான சூரியன்(சூரிய கலை) மூல நட்சத்திரம் தில் நிற்கும் போது , சூரியன் குரு இணைவின் காரணமாக அரச பதவிகளில் அமரும் வாய்ப்பு உண்டாகும் ..இதுவே ஆண் மூலம் அரசாளும். என்பதன் பொருள் ..